கள்ளக்குறிச்சி விவகாரம்: வாட்ஸ் ஆப் குழு மூலம் போராட்டத்திற்கு ஆள் சேர்ப்பு-ஆலங்குடியில் 6 போ் கைது
புதுக்கோட்டை : கள்ளக்குறிச்சி மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த வாட்ஸ் ஆப் குழு அமைத்து, ஆள் சோ்த்ததாக புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சோ்ந்த 6 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள், மாணவி படித்த தனியார் பள்ளியை கடந்த 17ம் தேதி சூறையாடினர். வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வீடியோ ஆதாரத்தைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வாட்ஸ் அப் மூலம் குழு மூலம் ஒருங்கிணைந்து, பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் அடையாளம் கண்டு உடனுக்குடன் கைது செய்து வருகின்றனர். எனினும், வாட்ஸ் அப் மூலம் குழு அமைத்து, பல்வேறு மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் ஒருங்கிணைந்து வருவது, காவல்துறைக்கு கடும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, வாட்ஸ் அப் குழு அமைத்து, அதில் 510 பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவியின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அணி திரள்வோம் என்றும் அந்த வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்த தகவல், புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து, ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த மனிராஜ் மற்றும் சுந்தரராஜ் ஆகியோர், அந்த வாட்ஸ் அப் குழுவின் அட்மின் ஆக செயல்பட்டு, அவதூறு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு ஐயப்பன் என்பவரும் உறுதுணையாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, வாட்ஸப் குழுவின் அட்மினாக செயல்பட்ட மணிராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த சுந்தரராஜ், அய்யப்பன் உள்ளிட்ட வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினராக இருந்த 15 பேரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை மையமாக வைத்து கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சட்டவிரோத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ், சிக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிராஜ், மேல பொன்னன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன், கட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் மாங்கோட்டை மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவனை மட்டும் திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்த போலீசார், மற்ற ஐந்து பேரையும் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக வாட்ஸ் ஆப் தளம் உருவாக்கி கலவரத்தை தூண்ட முயன்றதாக, ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications