கள்ளக்குறிச்சி விவகாரம்: வாட்ஸ் ஆப் குழு மூலம் போராட்டத்திற்கு ஆள் சேர்ப்பு-ஆலங்குடியில் 6 போ் கைது
புதுக்கோட்டை : கள்ளக்குறிச்சி மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த வாட்ஸ் ஆப் குழு அமைத்து, ஆள் சோ்த்ததாக புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சோ்ந்த 6 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள், மாணவி படித்த தனியார் பள்ளியை கடந்த 17ம் தேதி சூறையாடினர். வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வீடியோ ஆதாரத்தைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வாட்ஸ் அப் மூலம் குழு மூலம் ஒருங்கிணைந்து, பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் அடையாளம் கண்டு உடனுக்குடன் கைது செய்து வருகின்றனர். எனினும், வாட்ஸ் அப் மூலம் குழு அமைத்து, பல்வேறு மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் ஒருங்கிணைந்து வருவது, காவல்துறைக்கு கடும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, வாட்ஸ் அப் குழு அமைத்து, அதில் 510 பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவியின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அணி திரள்வோம் என்றும் அந்த வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்த தகவல், புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து, ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த மனிராஜ் மற்றும் சுந்தரராஜ் ஆகியோர், அந்த வாட்ஸ் அப் குழுவின் அட்மின் ஆக செயல்பட்டு, அவதூறு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு ஐயப்பன் என்பவரும் உறுதுணையாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, வாட்ஸப் குழுவின் அட்மினாக செயல்பட்ட மணிராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த சுந்தரராஜ், அய்யப்பன் உள்ளிட்ட வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினராக இருந்த 15 பேரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை மையமாக வைத்து கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சட்டவிரோத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ், சிக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிராஜ், மேல பொன்னன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன், கட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் மாங்கோட்டை மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவனை மட்டும் திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்த போலீசார், மற்ற ஐந்து பேரையும் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக வாட்ஸ் ஆப் தளம் உருவாக்கி கலவரத்தை தூண்ட முயன்றதாக, ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications