மக்கள் மீது அக்கறை இல்லை.. மகனை மந்திரி ஆக்கவே பாஜகவுக்கு ஆதரவு.. ஓபிஎஸ்-ஐ விளாசும் டிகேஸ் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: பாஜகவுக்கு ஆதரவாக இருந்து, எப்படியாவது தனது மகனை அமைச்சராக்கிவிட வேண்டும் என்பதாலேயே ஒன்றிய அரசு என்ற சொல்லை ஓபிஎஸ் எதிர்ப்பதாக திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

திமுக அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது. அப்போது முதலே மோடி தலைமையிலான பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஒன்றிய அரசு என்ற சொல் மிகப் பெரிய விவாத்தை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்றே தமிழ்நாடு பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டசபையிலேயே கேள்வியும் எழுப்பியிருந்தார். ஒன்றிய அரசு என்று அழைப்பதில் எவ்வித குற்றமும் இல்லை என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதை மட்டுமே திமுக அரசு பயன்படுத்துகிறது என்றும் ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஓபிஎஸ் விமர்சனம்

ஓபிஎஸ் விமர்சனம்

இருந்தாலும்கூட இந்த சர்ச்சையை ஓய்ந்தபாடில்லை. மத்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலின் இது குறித்து சட்டசபையில் அளித்த விளக்கம் பொருத்தமானதாக இல்லை என்றும் எந்த தலைவரும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை என்றும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் காட்டமாக விமர்சித்திருந்தார்.

டிகேஎஸ் இளங்கோவன்

டிகேஎஸ் இளங்கோவன்

இந்நிலையில். திமுக திமுக செய்தித் தொடர்பு செயலாளரும் ராஜ்ய சபா எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஒன்றியம் என்ற சொல் சிறுமைத்தனம் என அவர்கள் பதறுகின்றனர். ஆனால் உண்மையில் ஒன்றியம் என்பது ஒற்றுமையைக் குறிக்கும் ஒரு சொல்.

மகனை அமைச்சராக்க முயலும் ஓபிஎஸ்

மகனை அமைச்சராக்க முயலும் ஓபிஎஸ்

ஒன்றிய அரசு என்று அழைப்பதை ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, எப்படியாவது அவர் மகனை மத்திய அமைச்சராக்கிவிட வேண்டும் என்பதற்காக அவர் இப்படிச் செயல்பட்டு வருகிறார். அதிமுகவில் ஏற்கனவே இரண்டு பேருக்கு இடையே தலைமைக்குப் போட்டி நடக்கிறது. இந்த நிலையில் இதில் இப்போது சசிகலாவும் வந்திருக்கிறார். அங்குள்ளவர்களுக்குப் பதவியில் மீது மட்டும் தான் அக்கறையே தவிர, கட்சி மீதும், மக்கள் மீதும் யாருக்கும் அக்கறை இல்லை.

நீட் விவகாரம்

நீட் விவகாரம்

திமுக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றார் விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். திமுக எப்போதும் தனது தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றும். திமுக அரசு மீது பழி போட வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறக் கூடாது என்பதே திமுகவின் நோக்கம்" என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+