பட்டா மாறுதல்.. கிராம நிர்வாக அதிகாரி முதல் தாசில்தார் வரை.. புதிதாக சிக்கிய புதுக்கோட்டை விஏஓ
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பட்டா மாற்றத்துக்கு விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர், தாசில்தார் என பலரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்பது, நிலத்தை அளக்க லஞ்சம் கேட்பது, மின் இணைப்பு லஞ்சம் கேட்பது, வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்பது பல அரசு சேவைகள் பெற லஞ்சம் கேட்பது இன்றும் பல அரசு அலுவலகங்களில் தொடர்கிறது.

எத்தனை அதிகாரிகள் கைது செய்யப்படுவது குறித்த செய்திகள் வந்தாலும், லஞ்சம் வாங்குவது மட்டும் நிற்கவே இல்லை. நிலங்களின் மதிப்பை பொறுத்து ஆயிரங்களில் லஞ்சம் கேட்பது தொடர்கிறது. சில பகுதிகளில் லட்சம் வரையிலும் லஞ்சம் கேட்பது நடக்கிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்படுகிறார்கள். அப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.பாலக்குறிச்சியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார். இவரது உறவினர்கள் நித்யா மற்றும்கவிதா. இவர்கள் பேருக்கும் 9 சென்ட் மற்றும் 7 சென்ட் தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குரிய பட்டா மாறுதல் செய்வதற்காக ஆர்.பாலக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சிவகுமார் சென்றுள்ளார். அங்கு புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி கிராமத்தை சேர்ந்த அப்பாதுரை (வயது 56) கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் பட்டா மாறுதல் குறித்து சிவக்குமார் அணுகி உள்ளார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரை பட்டா மாறுதல் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவக்குமார், இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை பிரிவு போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ.50 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி சிவக்குமார் நேற்று பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரையிடம் ரூ.50 ஆயிரத்தை அவர் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று, அப்பாதுரையை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 50000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி புதுக்கோட்டை அருகே கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications