புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்எஸ்எஸ், பாஜக அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... புதுக்கோட்டை இளைஞரை கைது செய்த உபி போலீஸ்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: உத்தரபிரதேசத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜ் முகமதுவை கைது செய்து போலீசார் விசாரணை பரபரப்பு.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர தொண்டரும் உதவி பேராசிரியருமாக இருப்பவர் நீல்காந்த் மணி பூஜாரி.

இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒருவரிடம் இருந்து ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

பாஜக எம்எல்ஏ வந்தாலும், அரசு உதவிபெறும் பள்ளியில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு நோ அனுமதி: ஹெச்.எம் அதிரடிபாஜக எம்எல்ஏ வந்தாலும், அரசு உதவிபெறும் பள்ளியில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு நோ அனுமதி: ஹெச்.எம் அதிரடி

வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல்

அதில் லக்னோ, உன்னாவ் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் என மொத்தம் 5 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்திருந்தது. இதேபோல், உத்தரப்பிரதேச காவல்துறை உயரதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் பாஜக அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை இளைஞர்

புதுக்கோட்டை இளைஞர்

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் நீர்காந்தும் மதியாவ் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மிரட்டல் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வந்ததை உறுதி செய்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையை தொடர்புகொண்டு உத்தரப்பிரதேச போலீஸ் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தவரின் முகவரியை உறுதி செய்தனர்.

 புதுக்கோட்டை வந்த உபி போலீஸ்

புதுக்கோட்டை வந்த உபி போலீஸ்

இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோணத்தை சேர்ந்த ராஜ் முஹம்மது என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதன் பின்னர் லக்னோவிலிருந்து விமானத்தில் வந்த உத்தரப்பிரதேச போலீசார் அவரை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக உத்தரப்பிரதேசம் அழைத்துச் செல்ல உள்ளனர்.

கர்நாடகா போலீஸ்

கர்நாடகா போலீஸ்

வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட மிரட்டல் செய்தியில் கர்நாடகாவின் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால் அவர்களும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கி இருக்கின்றனர். எனவே கர்நாடக போலீசாரும் கைதான ராஜ் முஹம்மதுவை காவலில் எடுத்து விசாரணைக்கு அழைத்து செல்ல அனுமதிகோரும் என்று கூறப்படுகிறது.

English summary
Pudukottai youth arrested for bomb threatining to RSS and BJP offices: உத்தரபிரதேசத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜ் முகமதுவை கைது செய்து போலீசார் விசாரணை பரபரப்பு.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X