Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டுப்பாட்டில் கொரோனா... தமிழகத்திடம் ஆலோசனை கேட்கிறது தென் ஆப்ரிக்கா -அமைச்சர் விஜயபாஸ்கர்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தமிழகத்திடம் தென் ஆப்ரிக்கா ஆலோசனை கேட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இதேநிலை தொடர்வதற்கான அனைத்து பணிகளையும் முன்னெடுத்துள்ளதாக கூறினார்.

South Africa seeks advice from Tamil Nadu

கொரோனாவை பொறுத்தவரை தமிழகத்தின் செயல்பாடுகளை கண்டு இன்று உலக நாடுகளே வியப்பதாகவும் பிரிக்ஸ் நாடுகள், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கொரோனாவை கட்டுப்பத்துவது குறித்து தமிழக சுகாதாரத்துறையிடம் ஆலோசனை கேட்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கொரோனா சோதனையில் உலகமே வியக்கும் அளவுக்கு தமிழகம் செயல்பட்டதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இன்றும் கூட தமிழகத்தை பல்வேறு மாநிலங்களும் புருவம் உயர்த்தி பார்ப்பதாக தெரிவித்தார்.

கொரோனா பரவல் உச்சகட்டத்தில் இருந்த போது அரசு என்ன செய்கிறது எனக் கேள்வி எழுப்பியவர்கள் இன்று கொரோனா பரவல் குறைந்துவிட்டதை அடுத்து வாய்திறப்பதில்லை எனக் கூறினார்.

மேலும், வரும் 170ம் தேதி விராலிமலையில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி மழை காரணமாக தள்ளி வைக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+