என்ன என்ன ஐட்டங்களோ! 10 மாட்டுவண்டி நிறைய, தாய்மாமன் சீர்னா இப்படி இருக்கனும்.. மிரண்ட புதுக்கோட்டை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காதணி விழாவிற்கு 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தாய்மாமன்கள் சீர் கொண்டு சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலரும் வியந்து போய், இப்படியும் தாய்மாமன்களா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள்.
தாய் மாமன் சீர் என்பது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக உள்ள பழக்கமாகும். தனது தங்கை அல்லது அக்காவின் மகன் மற்றும் மகளுக்கு காதணி விழா நடைபெற்றால், தாய்மாமன் மடியில் வைத்து தான் காது குத்தி மொட்டை அடிப்பார்கள். அப்போது தாய் மாமன் வீட்டு சீராக பாரம்பரிய பழக்கத்தின் படி தங்களால் முடிந்ததை வழங்குவார்கள்.

இதேபோல் தாய்மாமன் சீர் இன்னொரு முறையும் வழங்கப்படும். தனது அக்கா அல்லது தங்கை மகள் பூப்பெய்திவிட்டால், தாய் வீட்டு சீர்வரிசையாக தாய்மாமன்கள் பல பொருட்களை வழங்குவார்கள், இந்த இரண்டும் காலகாலமாக இருந்து வரும் தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சாரம்,.
புதுக்கோட்டை மாவட்டங்களில் தாய் மாமன் சீர் என்பது பெரிய அளவில் பேமஸ் ஆகும். மொய் விருந்து எப்படியோ, அப்படித்தான் தாய்மாமன் சீர் நிகழ்வும், மிக பிரம்மாண்டமாக நடைபெறும். அப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் காதணி விழாவிற்கு 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தாய்மாமன்கள் சீர் கொண்டு சென்று அசத்தி உள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞராஜா, நவனீதா தம்பதிகளின் இரு குழந்தைகளுக்கும் காதணி விழா முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

இதை முன்னிட்டு குழந்தைகளின் தாய்மாமன்களான அனவயல் ஆண்டவராயபுரத்தைச் சேர்ந்த நவீன் சுந்தர் மற்றும் நவசீலன் ஆகியோர் பாராம்பரிய முறைப்படி 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் சீர்வரிசையுடன் அணி வகுத்து வந்தனர்.
அப்போது பெண்கள் பூக்கள், இனிப்புகள், பழங்களுடன் தாம்பளங்களை ஏந்தியபடியும், ஆண்கள் ஆடு, மிதிவண்டி, பைக் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை பிடித்தபடியும் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து சீர் செய்த நிகழ்வு , காண்போரை அந்த காலத்திற்கே அழைத்து சென்றது.

கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் லாரி நிறைய சீர் கொண்டு வந்து தாய்மாமன் ஒருவர் அசத்தி இருந்தார். தனது சகோதரி மகள் பூப்பெய்தி செய்தி கேட்டு, லாரி நிறைய உடைகள், அலங்கார உபகரணங்கள், பூக்கள், பழங்கள், மாலை, புத்தகங்கள் என 350 தட்டுகளுடன் வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அசத்தி இருந்தார். அந்த வகையில் 10 மாட்டு வண்டிய நிறைய சீருடன் இப்போதும் நடந்துள்ளது. புதுக்கோட்டையில் தாய்மாமன் சீர் நிகழ்வுகள் வெகுவிமரிசையாக தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனிடையே மாட்டு வண்டியில் சீர் கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து தாய்மாமன்கள் கூறுகையில், எங்களுடைய அப்பா, அம்மாவின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தது இந்த மாட்டு வண்டிதான். எனவே அதன் பெருமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல விரும்பினோம். தமிழர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி மாட்டு வண்டியில் சீர்கொண்டு வந்து காதணி விழாவை சிறப்பித்தோம் என்று கூறினார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications