என்ன என்ன ஐட்டங்களோ! 10 மாட்டுவண்டி நிறைய, தாய்மாமன் சீர்னா இப்படி இருக்கனும்.. மிரண்ட புதுக்கோட்டை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காதணி விழாவிற்கு 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தாய்மாமன்கள் சீர் கொண்டு சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலரும் வியந்து போய், இப்படியும் தாய்மாமன்களா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள்.
தாய் மாமன் சீர் என்பது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக உள்ள பழக்கமாகும். தனது தங்கை அல்லது அக்காவின் மகன் மற்றும் மகளுக்கு காதணி விழா நடைபெற்றால், தாய்மாமன் மடியில் வைத்து தான் காது குத்தி மொட்டை அடிப்பார்கள். அப்போது தாய் மாமன் வீட்டு சீராக பாரம்பரிய பழக்கத்தின் படி தங்களால் முடிந்ததை வழங்குவார்கள்.

இதேபோல் தாய்மாமன் சீர் இன்னொரு முறையும் வழங்கப்படும். தனது அக்கா அல்லது தங்கை மகள் பூப்பெய்திவிட்டால், தாய் வீட்டு சீர்வரிசையாக தாய்மாமன்கள் பல பொருட்களை வழங்குவார்கள், இந்த இரண்டும் காலகாலமாக இருந்து வரும் தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சாரம்,.
புதுக்கோட்டை மாவட்டங்களில் தாய் மாமன் சீர் என்பது பெரிய அளவில் பேமஸ் ஆகும். மொய் விருந்து எப்படியோ, அப்படித்தான் தாய்மாமன் சீர் நிகழ்வும், மிக பிரம்மாண்டமாக நடைபெறும். அப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் காதணி விழாவிற்கு 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தாய்மாமன்கள் சீர் கொண்டு சென்று அசத்தி உள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞராஜா, நவனீதா தம்பதிகளின் இரு குழந்தைகளுக்கும் காதணி விழா முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

இதை முன்னிட்டு குழந்தைகளின் தாய்மாமன்களான அனவயல் ஆண்டவராயபுரத்தைச் சேர்ந்த நவீன் சுந்தர் மற்றும் நவசீலன் ஆகியோர் பாராம்பரிய முறைப்படி 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் சீர்வரிசையுடன் அணி வகுத்து வந்தனர்.
அப்போது பெண்கள் பூக்கள், இனிப்புகள், பழங்களுடன் தாம்பளங்களை ஏந்தியபடியும், ஆண்கள் ஆடு, மிதிவண்டி, பைக் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை பிடித்தபடியும் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து சீர் செய்த நிகழ்வு , காண்போரை அந்த காலத்திற்கே அழைத்து சென்றது.

கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் லாரி நிறைய சீர் கொண்டு வந்து தாய்மாமன் ஒருவர் அசத்தி இருந்தார். தனது சகோதரி மகள் பூப்பெய்தி செய்தி கேட்டு, லாரி நிறைய உடைகள், அலங்கார உபகரணங்கள், பூக்கள், பழங்கள், மாலை, புத்தகங்கள் என 350 தட்டுகளுடன் வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அசத்தி இருந்தார். அந்த வகையில் 10 மாட்டு வண்டிய நிறைய சீருடன் இப்போதும் நடந்துள்ளது. புதுக்கோட்டையில் தாய்மாமன் சீர் நிகழ்வுகள் வெகுவிமரிசையாக தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனிடையே மாட்டு வண்டியில் சீர் கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து தாய்மாமன்கள் கூறுகையில், எங்களுடைய அப்பா, அம்மாவின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தது இந்த மாட்டு வண்டிதான். எனவே அதன் பெருமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல விரும்பினோம். தமிழர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி மாட்டு வண்டியில் சீர்கொண்டு வந்து காதணி விழாவை சிறப்பித்தோம் என்று கூறினார்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications