5 முறை.. வானத்தில் கேட்ட பெரிய சத்தம்! அண்ணாந்து பார்த்து பதறிய மக்கள்.. புதுக்கோட்டையில் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கிராமங்களில் நேற்று மாலை வானத்தில் கடும் சத்தம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. நேற்று மாலை அங்கு திடீரென வானத்தில் சத்தம் கேட்டுள்ளது.

சத்தம்

சத்தம்

அதிக சத்தத்துடன் வெடி வெடிப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் வெளியே வந்து பார்த்து உள்ளனர். ஏதாவது வெடித்துவிட்டதா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று சோதிக்க மக்கள் வெளியே வந்து பார்த்தனர். ஆனால் வானத்தில் அப்போது எதுவும் இல்லை. தொடர்ந்து சத்தம் மட்டும் கேட்டுள்ளது.

எப்படி?

எப்படி?

இந்த நிலையில்தான் சில நொடியில் அங்கு விமானம் ஒன்று வந்துள்ளது. இதை அண்ணாந்து பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மேலும் பல விமானங்கள் அங்கு அடுத்தடுத்து வந்துள்ளன. மொத்தம் 5 விமானங்கள் ஒரே நேரத்தில் வந்துள்ளன. அதுவும் இவை போர் விமானங்கள். இவை அங்கேயே வட்டமடித்து உள்ளன.

வட்டம்

வட்டம்

இதை மக்கள் அண்ணாந்து பார்த்தபடி இருந்தனர். அப்போது அந்த விமானங்கள் மிகவும் தாழ்வாக பறந்துள்ளன. ஒரு முறை என்று இல்லாமல் இந்த விமானங்கள் 5 முறை அங்கு பெரிய வட்டம் போட்டுள்ளன. இது மிகப்பெரிய சத்தத்தை எழுப்பி உள்ளது. இந்த விமானங்கள் சோனிக் வேகத்தில் சென்றுள்ளன.

சோனிக்

சோனிக்

சோனிக் வேகம் காரணமாக சோனிக் பூம் என்ற விளைவு ஏற்பட்டு வானத்தில் காற்று வெடிப்பது போன்ற சத்தம் கேட்கும். நேற்றும் இந்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் மக்கள் பதற்றத்துடன் வானத்தை பார்த்துள்ளனர். கடைசியில்தான் இது அருகில் உள்ள தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இருந்து வந்த போர் பயிற்சி விமானங்கள் என்று தெரிய வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+