ஸ்கேன் சென்டரில் பரிசோதிக்கும் மருத்துவருக்கு கொரோனா .. இப்போது 62 கர்ப்பிணிகள் தனிமையில்!
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஷிக்ராபூரில் ஸ்கேன் சென்டரில் வேலை பார்க்கும் சோனாலாஜிஸ்டுக்கு ( sonographer) கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரிடம் கர்ப்பம் குறித்து ஸ்கேன் செய்த ஷிக்ராபூரைச் சேர்ந்த 62 கர்ப்பிணிகள தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பெண்கள் அனைவரும் ஏப்ரல் 6-8 வரை அந்த சோனாலாஜிஸ்டிடம் ஸ்கேனிங் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த. பெண்கள் யாருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை என்று புனே மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரி ஏ பிரசாத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் இருந்து டெல்லி தப்லிக் மாநாட்டில் பங்கேற்ற 1,400 பேரில் இதுவரை 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் இதுவரை 23 காவல்துறையினர் கொரோனா ரைவஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
கொரோனா ஹாட்ஸ்பாட்டாக கன்னியாகுமரி அறிவிப்பு.. களியக்காவிளை எல்லையை மூடியது கேரளா
நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 286 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 194 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளார்கள். 300 கொரோனா நோயாளிகள் நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்,
மும்பையில் மட்டும் 2003 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை தான் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. இன்று மட்டும் மும்பையில் 107 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.