ஜெயிலுக்கு போறது உறுதி.. அரசியல்வாதிகளை கடுமையாக எச்சரித்த பிரதமர் மோடி
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓயப்போகிறது என்பதால் பிரச்சாரம் இரு மாநிலங்களிலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இரு மாநிலங்களிலும் மாறி மாறி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த பொதுக்கூட்டத்தல் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. உலக அளவில் நான் சந்திக்கும் ஒவ்வொரு தொழிலதிபர்களுமே, இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றார்கள். தற்போது வலிமையான மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.
நாட்டை கொள்ளையடித்தவர்களை சிறைக்கு அனுப்புவேன் என தேர்தலுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதன்படி இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது அல்லவா? ஆனால் இதற்கு முன்பு இப்படி நடவடிக்கை எடுக்க துணிச்சல் யாருக்கும் இருந்தது இல்லை. நாட்டில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் கொள்ளையடித்த ஒவ்வாரு காசையும் அவர்களிடம் சேர்க்காமல் நான் ஓயமாட்டேன்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications