ஆக்ஸ்போர்டு தடுப்பூசி.. இந்தியாவில் 3வது கட்ட டிரையல் ஆரம்பம்.. 1600 பேருக்கு ஊசி போட்டாச்சு
புனே: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி 1600 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அதன் 3வது கட்ட பரிசோதனை குறித்து தகவல் தெரிவித்துள்ளார் எஸ்ஐஐ அமைப்பின் தலைமை நிர்வாகி அதிகாரி ஆதார் பூனவல்லா.
புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியான 'கோவிஷீல்ட்' பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவில் 'கோவிஷீல்ட்' க்கான 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நாடு முழுவதும் 15 வெவ்வேறு மையங்களில் நடத்தி வருகிறது எஸ்ஐஐ நிறுவனம்.

தன்னார்வலர்கள்
1,600 தன்னார்வலர்களின் சேர்க்கை அக்டோபர் 31 க்குள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது, அவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது. "இப்போது அவர்கள் அனைவரும் அடுத்த 28 நாட்களுக்கு கண்காணிப்பில் உள்ளனர்" என்று எஸ்ஐஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தடுப்பூசி
ஏற்கனவே ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசியை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் கொள்முதல் செய்துள்ள நிலையில், அதன் கிளினிக்கல் டிரையல் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சூப்பர்
ஐ.சி.எம்.ஆரின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா கூறுகையில், "தற்போது, உலகளவில் தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது." என்றார்.

உதவி செய்வோம்
மேலும் அவர் கூறுகையில், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் நல்ல வசதிகள் கொண்ட எஸ்ஐஐ, தனது ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி வலிமையை தொடர்ந்து நிரூபித்துள்ளது. எங்கள் நிபுணத்துவத்தையும் ஆதரவையும் வழங்குவதில் பெருமை கொள்கிறோம் " என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications