சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்.. புனே கார் விபத்தில்.. அப்பா, தாத்தாவை தொடர்ந்து சிறுவனின் தாயும் கைது!
புனே: புனே கார் விபத்தில் சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பல ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், இப்போது அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்து மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிபோதையில் காரை இயக்கிய பிரபல கட்டுமான தொழிலதிபரின் 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

தாய் கைது: சிறுவனை உடனடியாக அருகே இருந்தவர்கள் பிடித்த நிலையில், புனே போலீசார் சிறுவனை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் அந்த சிறுவனைக் காப்பாற்ற சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பல ட்விஸ்ட்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. ஏற்கனவே விபத்து தொடர்பாக அந்த 17 வயது சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அந்த சிறுவனின் தாயை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
விபத்து நடந்தபோது சிறுவன் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ய போலீசார் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை நடத்தி இருந்தனர். இருப்பினும், அந்த மருத்துவர்கள் 3 லட்சம் லஞ்சம் வாங்கிவிட்டு சிறுவனின் ரத்த மாதிரியைக் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். அதற்குப் பதிலாகச் சிறுவனின் தாயின் ரத்த மாதிரியை அங்கு வைத்துள்ளனர். ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை என்பதைக் காட்டவே இதைச் செய்துள்ளனர்.
எதற்காக கைது: இந்த விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு பியூன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது சிறுவனின் தாயாரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றச்சாட்டில் தாயைக் கைது செய்துள்ளதாக போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.
பின்னணி என்ன: கடந்த மே 19ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் குடிபோதையில் காரை ஓட்டிய அந்த சிறுவன் மோதியதில் பைக்கில் இருந்த தம்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 17 வயது சிறுவனுக்கு முதலில் ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், சில நாட்களில் அது ரத்து செய்யப்பட்டது. இப்போது சிறுவன் கண்காணிப்பு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்த விபத்தில் சினிமாவை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்குப் பல ட்விஸ்ட்கள் நடந்துள்ளன. முதலில் விபத்தை ஏற்படுத்தியதாகப் பழியை ஏற்றுக் கொள்ளும்படி டிரைவரை கேட்டுள்ளனர். இருப்பினும், அவர் மறுக்கவே டிரைவரை கடத்தி அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் தான் இப்போது சிறுவனின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது: மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் தான் பிளஸ் 2 ரிசல்ட்கள் வெளியானது. இதைக் கொண்டாடும் வகையில் புனே சிறுவன் தனது நண்பர்களை அழைத்து பப்பில் ட்ரீட் கொடுத்துள்ளார். பிறகு மதுபோதையில் இருந்த அந்த சிறுவன் அதிவேகமாகக் காரை ஓட்டிய நிலையில், அது பைக் ஒன்றின் மீது மோதியுள்ளது. அதில் பைக்கில் வந்த தம்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications