700 வருடம் பழமையான பாம்பன் பள்ளிவாசல்.. புதுப்பிப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு!
ராமநாதபுரம்: பாம்பன் பகுதியில் அமைந்துள்ள 700 ஆண்டுகள் பழமையான ஜாமி ஆ மஸ்ஜித் புதுப்பிக்கப்பட்ட நிலையில், அந்தப் பள்ளிவாசல் மீண்டும் நேற்றைய தினம் (ஏப்ரல் 20) திறக்கப்பட்டது. அங்கு நேற்று இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வழிபட்டனர்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தை அடுத்துள்ள ஊர் தான் பாம்பன். இது தீவின் மேற்கு விளிம்பில் உள்ளது. இங்கு மீன்பிடித் தொழிலே பிரதானத் தொழிலாக இருக்கிறது. இந்த பாம்பன் பகுதியில் தான் சமீபத்தில் புதிய பாம்பன் தூக்கு மேம்பாலம் திறக்கப்பட்டது.

பாம்பன் பள்ளிவாசல்
பழமையான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் பாம்பன் பகுதியில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் அமைந்துள்ளன. இதற்கிடையே அங்குச் சுமார் 700 ஆண்டுகள் பழமையான பாம்பன் பள்ளிவாசல் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
700 ஆண்டுகள் பழமையானது
ஜாமி ஆ மஸ்ஜித் என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளிவாசல் 700 ஆண்டுகளுக்கு முன்பு 1311ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் இங்கு தான் தொழுகை செய்து வந்தனர். இந்தப் பள்ளிவாசல் ஏற்கனவே கடந்த 1992ம் ஆண்டு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தொழுகை நடத்தும் அறையில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிவாசல்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசல் நேற்று ஏப்ரல் 21ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.
கட்டியது யார்
மாலிக் கபூர் என்பவரே இந்த 700 ஆண்டுகள் பழமையான பாம்பன் பள்ளிவாசல், அதாவது ஜாமி ஆ மஸ்ஜித்தை கட்டியவர் ஆவார். இவர் அலாவுதீன் கில்ஜி மன்னரின் படைத்தலைவராக இருந்தவர். இந்தப் பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த இடம் தேவை என்பதால் இவர் இந்தப் பள்ளிவாசலை கட்டியிருக்கிறார். அப்போது முதலே இங்கு தான் மக்கள் தொழுகை நடத்தி வந்துள்ளனர்.
இடையில் கடந்த 1992ம் ஆண்டு இந்தப் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டது. இதற்கிடையே சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பள்ளிவாசல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளே தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications