Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 8 மீனவர்கள் மாயம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: மல்லிப்பட்டினம் கடற்கரையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கியதில் 8 மீனவர்கள் மாயமாகினர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடலூரில் இருந்து மீன் பிடிப்படகு வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மல்லிப்பட்டினம் அருகே படகு கடலில் கவிழ்ந்தது.

8 fishermen were drown in sea water near Rameswaram

இந்த விபத்தில் 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் செந்தில், காளீஸ்வரன் ஆகிய இருவர் உயிர் தப்பி ராமேஸ்வரம் வந்தனர். நேராக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் சென்று நடந்தவற்றை கூறியதோடு 8 பேர் மாயமான செய்தியையும் கூறினர்.

இதையடுத்து 8 பேரையும் தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ராமேஸ்வரத்தில் சோகம் நிலவியுள்ளது. தகவலறிந்த மற்ற மீனவர்களும் 8 மீனவர்களின் உறவினர்களும் கரையில் நின்று கொண்டு அழுது கொண்டிருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+