தான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் வலைவீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் வெங்கடேசுவரன்(வயது 21). மீன் பிடி தொழில்செய்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர் வழக்கம் போல் ஒரு பைபர் படகில் தனியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருக்கிறார்.

அப்போது அவர் படகில் நின்றவாறு வலையை நடுக்கடலில் வீசியிருக்கிறார். எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துவிட்டார். இதனால் தப்பிக்க வழியின்றி மூச்சு திணறி பலியானார்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய வெங்கடேசுவரன் நீண்டநேரமாகியும் வராததை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் கடலில் தேடினர். அப்போது அவர் சென்ற படகு மட்டும் நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து அங்கு பார்த்த போது வெங்கடேசுவரன் வலையில் சிக்கி உயிரிழந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவரது உடலையும், படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வெங்கடேசுவரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் தொண்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications