Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி! கிளைச் செயலாளர் விடுத்த அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் செல்கிறார்.

முத்துராமலிங்கத் தேவர்: ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 30ஆம் தேதி பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.

 Edappadi Palaniswami is going to Pasumpon on October 30 to participate in Muthuramalinga Devar Gurupoojai

அதிமுக பொதுச்செயலாளர்: கடந்த 2 ஆண்டுகளாக பசும்பொன் செல்லாத எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளராகிய பிறகு முதல் முறையாக இந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் செல்கிறார். எக்ஸ் ஸ்பேசஸில் நேற்றிரவு உரை நிகழ்த்திய போது, கமுதி அருகே உள்ள கிளைச் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விடுத்த அழைப்பை ஏற்று முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க வருவதாக உறுதியளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி.

உற்சாக வரவேற்பு கொடுக்கத் திட்டம்: எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் மிரட்சியோடு பார்க்கின்றனர். தாங்கள் சார்ந்த சமுதாய ரீதியாக எதிர்ப்பு கிளம்பும் என்பதால் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லமாட்டார் என அவர்கள் கருதிய நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரையிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து பசும்பொன் அழைத்துச் செல்வதற்கான பணிகளை தென் மாவட்ட அதிமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாநாடு: கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக பொன்விழா மாநாட்டை நடத்திய எடப்பாடி பழனிசாமி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஏன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் இந்தாண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று அவரது குருபூஜையில் பங்கேற்கிறார் எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+