ராமேஸ்வரம் அருகே 100 மீட்டர் அளவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்.. பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடல் திடீரென உள்வாங்கியதால், அப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மாமல்லபுரம் உள்ளிட்ட பல கடற்கரை பகுதிகளில் கடந்த இரு நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால் தனுஷ்கோடி பகுதியில் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. பாம்பன் பகுதியிலும் பலத்த சூறாவளி வீசியதால் தானியங்கி சிக்னலில் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7 மணி வரை பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வீசும் சூறைக்காற்று காரணமாக சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் சூறைக்காற்றால் ராமேஸ்வரம் பகுதிக்குட்பட்ட கடலில், சீற்றமும் சற்று அதிமாகவே காணப்பட்டது.
கடல் அலைகள் வழக்கத்தைவிட மிக அதிக உயரத்திற்கு எழும்பின. இதனால் பொதுமக்கள் கடலில் இறங்கி விளையாட கடலோர காவல்படையினர் அனுமதி மறுத்து விட்டனர். கடந்த இரு நாட்கள் விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடலில் இறங்கி விளையாடி பொழுதை கழிக்க ஆர்வமுடன் வந்திருந்தனர்.
கடலோர காவல்படையினரின் தடையால் அவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் சங்குமால், ஓலைக்குடா, அக்னிதீர்த்தம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக, 100 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் பீதியடைந்தனர்.
கடல் திடீரென 100 மீட்டர் அளவிற்கு உள்வாங்கியதால் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தன. மேலும் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகளும் தரைதட்டின. இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு அச்சம் நிலவியது.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கடல் நீர் பெருக்கெடுத்து வந்து சாதாரணமாக காட்சியளித்தது கடல். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் நிம்மதியடைந்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications