தனுஷ்கோடி புயலுக்கே தாங்கிய பாம்பன் பாலம்.. இந்த புரேவிக்கெல்லாம் அசையுமா?.. அத்தனை ஸ்டிராங்காச்சே!
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி புயலுக்கே தாங்கிய பாம்பன் பாலத்தை இந்த புரேவி புயல் என்ன செய்யும்? எனவே பாம்பன் அருகே கரையை கடந்தாலும் அச்சப்படத் தேவையில்லை மக்களே!
புரேவி புயல் நாளை கன்னியாகுமரி- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. பாம்பன் பாலத்தின் பலம், வரலாறு தெரியாத வெகு சிலர் இந்த புரேவியை கண்டு அஞ்சுகிறார்கள். தற்போது பாம்பன் பாலத்தின் வரலாறு குறித்து பார்ப்போம்.
பாம்பலன் பாலம் என்பது ஒரு ரயில் பாலம். இது இந்தியாவின் நிலபரப்பான மண்டபம் பகுதியையும் ராமேஸ்வரத்தின் பாம்பன் தீவையும் இணைக்கிறது. இந்த பாலம் கடந்த செப்டம்பர் 24, 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் கடல் பாலமாகவும் மிக நீண்ட கடல் பாலமாகவும் இருந்தது.

கடல் பாலம்
ஆனால் 2010-ஆம் ஆண்டு பாந்த்ரா- வோர்லி இடையே கடல் பாலம் அமைக்கப்பட்டதால் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமையை இது தட்டிச் சென்றுவிட்டது. பாம்பன் பாலத்தின் கீழ் கப்பல்கள் செல்ல ஏதுவாக நடுப்பகுதியை உயரமக தூக்கும் அளவுக்கு வடிவமைத்துள்ளனர். இந்த பாலம் வழியே மாதந்தோறும் 10 கப்பல்கள் செல்லும்.

வாரம் ஒரு முறை திறப்பு
பாலத்தின் இடையே 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இரு புறமும் உள்ள தூணின் உயரம் 220 அடியாகும். இந்த பாலத்தை கட்ட 5000 டன் சிமென்டும் 18 ஆயிரம் டன் எஃகு இரும்பும் பயன்படுத்தப்பட்டது. இந்த பாலம் கப்பல்களுக்காக வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. துருப்பிடிக்காத வகையில் ஜோராக அமைக்கப்பட்டுள்ளது பாம்பன் பாலம்.

உருத்தெரியாமல் அழிந்த நகரம்
பாம்பன் பாலம் அமைக்கப்பட்ட பகுதி சுனாமி ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதியாகும். 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடி புயலால் இந்த பாலத்திற்கு எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. ஆனால் தனுஷ்கோடி நகரம் முழுவதும் உருத்தெரியாமல் அழிந்து போனது.

சுனாமி
மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி ஏற்பட்டு அலையின் உயரம் 40 முதல் 50 அடி உயரம் வரை எழும்பி தனுஷ்கோடி நகரமே மூழ்கியது. எனவே புரேவி புயலை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications