தனுஷ்கோடி கடலில் வரலாறு காணாத மாற்றம்.. 10 கிமீ தூரத்திற்கு ஆச்சர்யம்.. சுற்றுலா பயணிகள் திகைப்பு
ராமநாதபுரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடுமையான சீற்றம் காரணமாக எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.. இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். போட்டி போட்டு வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டின் தீவு நகரமான ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள கடல் பகுதி தனுஷ்கோடி.. பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த கடல் பகுதியாகும். இது வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடமாக இருக்கிறது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக நம்பிக்கை நிலவுகிறது. வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி என்று அழைக்கப்படுகிறது.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட பெரிய புயல் கரையை கடந்த போது இராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே அன்று கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும், பாம்பனையும் இணைத்த ரயில் பாதையும், அப்போது சென்ற ரயிலும் மொத்தமாக புயலால் அழிக்கப்பட்டது. இந்த புயலில் ரயிலில் சென்ற 123 பேர் மற்றும் தனுஷ்கோடியில் இருந்த சுமார் 2000 பேர் மாண்டுபோனார்கள். அதன் பின்னர் தமிழக அரசு தனுஷ்கோடியை வாழத் தகுதியற்ற நகரமாக அறிவித்தது.
தற்போது தனுஷ்கோடியில் சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டிடங்களும் மட்டுமே இருக்கிறது. ராமேஸ்வரம் இந்துக்களின் புனித தலமாக இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். இந்தியாவின் புகழ் பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் இருக்கிறது. ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்கப்பட்ட பின்னர கடந்த சில வருடங்களாக சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற இடமாக தனுஷ்கோடி மாறி உள்ளது. ராமேஸ்வரம் வரும் அனைவரும் தனுஷ்கோடியும் வந்த செல்கிறார்கள்.. தனுஷ்கோடியை பொறுத்தவரை மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டு பார்க்கவே ரம்மியாக இருக்கும்..
அதேநேரம் தனுஷ்கோடி எவ்வளவு அழகானது அதைவிட அதிகமாக ஆபத்து நிறைந்த தீவு. அங்கு இயற்கையாகவே கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாகவே இருந்தது. பகலில் கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில், மாலையிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் நீர் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கி வந்த வண்ணம் இருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழப்பட்டு காணப்பட்டது.
அதுபோல் கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட தென்கடல் பகுதியில் கடல் சீற்றம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்ததால், கடல் நீரானது தடுப்புச் சுவரில் மோதி சாலை வரையிலும் வந்தது. இதை ஆச்சரியத்துடன் பார்த்த சுற்றுலா பயணிகள், செல்போனிலும் வீடியோ எடுத்தும் செல்ஃபி எடுத்தும் ரசித்தனர். அதேநேரம் கடலில் சீற்றம் ஏற்பட்டது தனுஷ்கோடி மீனவர்களை கவலையில் ஆழ்த்தியது. படகுகளை காப்பாற்ற நிறையவே போராட வேண்டியதிருந்தது. இதனிடையே 5 கிமீ தூரத்திற்கு கடலில் அலைகள் எழுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications