Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி" ராமநாதபுரத்தில் மீன் விற்பனை செய்ய தந்தைக்கு காரை பரிசாக கொடுத்த மகன்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தாயும் தந்தையும் வெயிலில் அவதிப்படாமல் மீன் வியாபாரம் செய்ய அவர்களுடைய மகன் காரை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அச்சந்தன் வயல் பகுதியைச் சேர்ந்த சிவானந்தம்- காளியம்மாள் தம்பதி. ஊருணி கண்மாய்களில் குத்தகைக்கு மீன் பிடித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

son gifted a car for elder parents to sell their fish

இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். சுரேஷ் கண்ணன் மரைன் என்ஜினியரிங் படித்துள்ளார். இவர் தற்போது வளைகுடா நாட்டை தலைமையிடமாக கொண்ட கப்பல் நிறுவனத்தில் மாதம் ரூ 2 லட்சம் ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தான் சம்பாதித்து தனது இரு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் சொந்தமாக வீட்டையும் கட்டியுள்ளார். சுரேஷ் கண்ணன் தாயையும் தந்தையையும் இந்த வேகாத வெயிலில் மீன் விற்பனைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் வயதான காலத்தில் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்குமாறும் கூறியுள்ளார்.

son gifted a car for elder parents to sell their fish

ஆனால் உழைத்து உழைத்து பழகி போன தம்பதிக்கு வீட்டில் உட்கார மனமில்லாமல் அந்த தம்பதி பாசமாக மறுப்பு தெரிவித்துவிட்டனர். எப்போதும் உழைத்து வாழ வேண்டும் என்றே விரும்பிய இவர்கல் கண்மாய் பகுதியில் இருந்து மீன்களை எடுத்து நகரில் உள்ள மீன் கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனால் தாய் தந்தை கஷ்டப்படாமல் இருக்க புதிதாக சொகுசு காரை வாங்கி பரிசளித்துள்ளார் சுரேஷ் கண்ணன். இதுகுறித்து சிவானந்தம் கூறுகையில் நாங்கள் மீன் பிடி தொழில் செய்து வருகிறோம். எங்கள் மகன் கார் வாங்கிக் கொடுத்துள்ளது பெருமையாக இருக்கிறது. நாங்கள் மீன் விற்பனை செய்து கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம். அவர் தற்போது எங்களுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.

son gifted a car for elder parents to sell their fish

இந்த காரில்தான் மீன்களை எடுத்துச் சென்று விற்று வருகிறோம். எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார். இந்த காரில் விலை நிச்சயம் ரூ 10 லட்சத்திற்கு மேல் இருக்கும். இன்று சொத்துக்காக தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றும் சில மகன்களுக்கு மத்தியில் மீன் வியாபாரத்திற்கு காரை வாங்கிக் கொடுத்து வைரமாக ஜொலிக்கிறார் சுரேஷ் கண்ணன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+