ராமேஸ்வரம் கோவிலில் ஆலய நுழைவு போராட்டம்.. போலீசார் - பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு! 200 பேர் கைது
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்கள் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் பொதுமக்கள் தரிசனம் செய்ய இருந்த சிறப்பு வழியை அடைத்து 200 ரூபாய் கட்டண வரிசையில் செல்ல திருக்கோயில் நிர்வாகம் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் பொதுமக்கள் சார்பில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்றது.

ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை திருக்கோயிலின் மேற்கு கோபுர வாசல் முன் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராகவும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் உள்ளூர் பொதுமக்கள் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ராமநாதசுவாமி சன்னதியின் வடக்கு புறத்தில் சிறப்பு வழி ஒன்று அமைக்கப்பட்டு அந்த வழியில் பல ஆண்டுகளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ளூர் பொதுமக்கள் பயன்படுத்தும் சிறப்பு வழியை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அடைத்து விட்டு வெளியூர் பக்தர்கள் செல்லும் 200 ரூபாய் கட்டண வழியில் கட்டணமின்றி செல்லுமாறு அறிவித்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் பொதுமக்கள் திருக்கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் உரிமையை திருக்கோயில் நிர்வாகம் பறிப்பதால் உடனடியாக உள்ளூர் பொதுமக்கள் செல்லும் சிறப்பு வழியை திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் தலைமையில் ராமேஸ்வரம் திருக்கோயில் இணை ஆணையர் செல்லத்துறை ராமேஸ்வரம் மக்கள் நல பேரவை குழு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று காலை ராமேஸ்வரம் மேற்கு கோபுர வாசல் வழியாக ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெறும் ராமேஸ்வரம் மக்கள் நல பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் இன்று காலை திட்டக்குடியில் இருந்து ராமேஸ்வரம் மேற்கு கோபுர வாசல் வரை பேரணியாக வந்த பொதுமக்கள் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்த போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் வாசல் முன் நடுத்தெரு சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மக்களை போலீசார் கைது செய்து தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராகவும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் ராமேஸ்வரம் திருக்கோயில் முன்பு ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து ஏடிஎஸ்பி சுப்பையா தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications