ராமநாதபுரத்தில் புத்த விஹார் அடிக்கல் நாட்டுவிழாவில் திருமா; வரிந்துகட்டும் வலதுசாரிகள்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஒரிக்கோட்டையில் நடைபெற்ற பிரஹ்போதி புத்த விஹார் அடிக்கல் நாட்டுவிழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்ற நிலையில் வலதுசாரிகள் வரிந்துகட்டத் தொடங்கியுள்ளனர்.
பெளத்த மதம் தொடர்புடைய நிகழ்வில் திருமாவளவன் கலந்துகொண்டதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
மதங்களுக்கு அப்பாற்பட்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் திருமா, புத்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன் என வலதுசாரிகள் கமெண்ட்கள் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புத்த விஹார்
ராமநாதபுரம் மாவட்டம் ஒரிக்கோட்டையில் பிரஹ்போதி புத்த விஹார் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் புத்த விஹாருக்கான அடிக்கல்லை நாட்டி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக திருமாவை வரவேற்ற புத்த பிட்சுகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமைக்காக நன்றி தெரிவித்ததோடு பெளத்த மதம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் எடுத்துக்கூறினர்.

மதச்சார்பின்மை
மதச்சார்பின்மை கொள்கையை கடைபிடித்து வரும் திருமாவளவன் புத்த மத நிகழ்வில் கலந்துகொண்டதை வழக்கம் போல் வலதுசாரிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். திருமாவளவன் நோன்பு காலத்தில் தொப்பி அணிந்து சஹர் உணவு சாப்பிட்ட படங்களையும், கிறிஸ்துவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோக்களையும், புத்த மத நிகழ்வில் கலந்துகொண்ட படங்களை பதிவிட்டும் இது தான் மதச்சார்பின்மை கொள்கையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

புத்தர் பெருமை
இதனிடையே புத்த விஹார் அடிக்கல் நாட்டுவிழாவில் பேசிய திருமா, புத்தரின் நற்பண்புகளையும் உயர்ந்த குணத்தையும் பற்றி புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்வுக்கு பிறகு தேவக்கோட்டை, காளையார்கோவில், தேவிப்பட்டனம் என தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் திருமா கலந்துகொண்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு திருமா வருகை புரிந்ததால் விசிகவினர் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.

கட்சிக்கொடி
இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் திருமாவை கட்சிக்கொடியை ஏற்ற வைத்து அவரை உற்சாகம் கொள்ளச் செய்திருந்தனர் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள். வட தமிழகத்தில் ஓரளவு கட்சியின் கட்டமைப்பை வலிமையோடு வைத்திருக்கும் திருமா, தென் மாவட்டங்களிலும் இனி விசிகவை வலிமைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருமாவின் இந்த முயற்சி புதிய தமிழகம் கட்சிக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications