Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதவிகள் அத்தனையும் ஒரே குடும்பத்திற்கே.. ராமநாதபுரம் தவெக நிர்வாகிகளால் ஷாக்கான விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமநாதபுரம் தவெக மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா கட்சி பொறுப்புகள் அத்தனையையும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தவெக தலைமை வரும் சென்ற போதும், பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கரூர் விவகாரம் தவெகவுக்கு மிகப்பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருந்து வந்தனர். தற்போது பொதுவெளியில் சுற்றித் திரிந்தாலும், பெரிதாக கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. தவெக தலைமையும் இதே பாணியில் இயங்கி வருகிறது.

TVK Vijay

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் கொடுத்திருந்தாலும், இதுவரை நேரில் சென்று விஜய் யாரையும் சந்திக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் எந்தவொரு விளக்கத்தையும் கூட கொடுக்கவில்லை. கடந்த சில நாட்களாகவே விஜய் வீட்டிற்கும், பனையூரில் உள்ள அலுவலகத்திற்கும் மாறி மாறி சென்று வருகிறார்.

அடுத்தக் கட்ட சுற்றுப்பயணம் குறித்தோ, தேர்தல் பணிகள் தொடர்பாகவோ விஜய் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜய்யின் இந்த அமைதி, அக்கட்சி நிர்வாகிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் திமுகவுக்கு கடுமையான போட்டியை அளிக்க வேண்டும் என்று விஜய் தீவிரமாக இருந்து வருகிறார்.

அடுத்தக் கட்ட சுற்றுப்பயணத்தில் திமுக vs தவெக என்பதை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் குடும்ப கட்சி என்பதையும் விஜய் தனது பிரச்சாரத்தில் முன்னிறுத்த உள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவதற்கு தவெக நிர்வாகிகள் சம பலத்துடன் இருக்கிறார்களா என்று விஜய் தரப்பு ஆய்வு நடத்தி இருக்கிறது.

இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் பட்டியலை பார்த்த விஜய் மிரண்டு போயிருக்கிறார். அதாவது ராமநாதபுரம் தவெகவின் மாவட்டச் செயலாளராக மலர்விழி ஜெயபாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த பொறுப்பை மொத்தமாக மேற்கொண்டு வருவது அவரின் கணவர் ஜெயபாலா தான் என்கிறார்கள். இவர் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்ட தவெகவில் நடந்த நிர்வாகிகள் நியமனத்தில் முழுக்க முழுக்க ஜெயபாலா முடிவு எடுத்துள்ளார். அதன்படி 10 மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் ஜெயபாலாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். மகன், மகள், சகலை, மனைவியின் தங்கை என்று குடும்ப உறுப்பினர்களுக்கும் பொறுப்பை கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

ராமநாதபுரம் தவெகவின் நிழல் மாவட்டச் செயலாளராக ஜெயபாலா செயல்பட்டு வருவது தெரிந்தும், மாவட்ட நிர்வாகம் தரப்பில் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறுகிறார்கள். இதற்கு பின் திமுகவின் மறைமுக கணக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தவெகவினரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+