கூடை கூடையாய் ராமேஸ்வரத்தில் மீன்கள்.. கடலில் குதூகலம்! கரையில் கொஞ்ச நேரத்தில் மாறியது காட்சி.. ஏன்
ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த 2 வாரமாக கடலுக்கு செல்ல முடியாமல் இருந்த ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள், கடல் அமைதி அடைந்த பிறகு மறுபடியும் மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள்.. அதிக அளவில் மீன்களை பிடித்து கரைக்கு மகிழ்ச்சியாகவும் திரும்பினார்கள்.. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.. ஏன் என்னாச்சு தெரியுமா?
தமிழகம் முழுக்க இப்போது மழை கொட்டி வருகிறது.. இதில் புயல் அறிவிப்பும் வந்து போனது.. அந்தவகையில், கடந்த 14ம் தேதி முதலே வங்க கடலில் சூறாவளிக் காற்று வீசி ஆரம்பித்துவிட்டது.. கடலில் சீற்றங்கள் துவங்கிவிட்டன..

ராமேஸ்வரம் கடல்
இந்த நேரத்தில்தான், டிட்வா புயல் அறிவிப்பு வெளியாகி பீதியை தந்துவிட்டது.. இந்த கலக்கம் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் யாருமே மீன்பிடிக்க போக கூடாது என்று மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது...
இதற்கு பிறகு, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியை கடந்து புயல், சென்னை நோக்கி நகர்ந்தது.. இதனால் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் குறைந்து கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. எனவே, 2 வாரம் கழித்து, மீன் பிடிக்க செல்வது என மீனவர்கள் முடிவு செய்தார்கள்..
இதற்காக கடந்த 2ம் தேதி, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்றார்கள்.. மொத்தம் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்துவிட்டு நேற்றுதான் கரைக்கு திரும்பினார்கள்..
கூடை கூடையாய் மீன்கள்
இந்த முறை எதிர்பார்த்ததைவிட மீன் வரத்து அதிகமாக இருந்தது... ஒவ்வொரு படகிலும் குறைந்தபட்சம் 5 டன்களுக்கும் மேல் மீன்கள் கிடைத்தன. முக்கியமாக, முண்டக்கண்ணி பாறை, சாவாளை, ஓரா போன்ற மீன் வகைகளின் வரத்து ஒவ்வொரு படகிலும் இரண்டு டன்களுக்கும் அதிகமாக காணப்பட்டது.
சாவாளை மீன், ஓரா மீன்
நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு இறங்கி, முதல் நாளிலேயே அதிக மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.. அதிக மீன்கள் கிடைத்ததால், அதிக லாபம் ஈட்டலாம் என்று கணக்கு போட்டனர்.. ஆனால், எதிர்பாராத விதமாக மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது.
இது குறித்து மீனவர்கள் சொல்லும்போது, "2 வாரம் கழித்து 5 டன்னுக்கும் மேல் மீன்கள் கிடைத்தன. ஆனால், சந்தையில் மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.. வழக்கமாக கிலோ ரூ.100-க்கு விற்பனையாகும் சாவாளை மீன், இப்போது வெறும் ரூ.40க்கும், ரூ. 80க்கு விற்பனையாகும் ஓரா மீன் ரூ.30-க்கும், ரூ.250 வரை விற்கப்படும் மாவுலா மீன் ரூ.150-க்கும் மட்டுமே விலை போகிறது. இதனால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை..
வெறும் 20 ரூபாய்
இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு காரணம், கார்த்திகை மாத விரதமாக இருக்கலாம்.. கார்த்திகை மாதத்தில் பலரும் அசைவம் சாப்பிடுவதில்லை.. இதனால் மீன்களுக்கான தேவை குறைந்துவிட்டது..
பாம்பன் மற்றும் கேரளா மீன் வியாபாரிகள் கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை என விலையைக் குறைத்து கேட்டதால், அதன்படியே கொடுக்க வேண்டியதாகிவிட்டது.. மொத்தத்தில் இந்த முறை அதிக மீன்கள் கிடைத்தும், விலை வீழ்ச்சியால் எங்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது என்று வருத்தத்துடன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications