பிரசாரம் ஓவர்.. நேராக ராமேஸ்வரத்திற்கு வண்டியைவிட்ட யோகி ஆதித்யநாத்.. ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு
ராமேஸ்வரம்: தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு நடத்தினார்.
தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக களமிறங்குகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர்கள் பலரும் தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகின்றர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
முதலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனினாவசனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். அப்போது நடத்தப்பட்ட பைக் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. இதனால் அங்குச் சற்று பதற்றம் நிலவியது.

அதைத்தொடர்ந்து விருதுநகரில் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் ராமேஸ்வரம் அமைந்துள்ள புண்ணிய பூமிக்கு வந்துள்ளது பெருமை அளிப்பதாகக் கூறி, தனது பேச்சைத் தொடங்கினார்.
இந்நிலையில், இரவு ராமேஸ்வரம் சென்ற உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு அமைந்துள்ள ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்தார்.












Click it and Unblock the Notifications