மனைவி பிகினி உடை அணிய 418 கோடி ரூபாய் செலவு செய்த துபாய் தொழிலதிபர்
ரியாத்: பிகினி உடையை மனைவி அணிய விரும்பியதால் ரூ 418 கோடிக்கு தனித் தீவையே துபாய் தொழிலதிபர் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அவர்கள் இருவரும் அதிக விலை கொண்ட பெர்ராரி கார், ஆடம்பர ரக உணவுஸ விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பல வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் சவுதி அல் நடாக் (26). துபாய்க்கு படிக்கச் சென்றபோது தொழிலதிபரான ஜமால் அல் நடாக் என்பவரை சந்தித்திருக்கிறார். இவர்களுக்கு காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமும் செய்து கொண்டனர்.

தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பின்பு, இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூகவலைதளங்களில் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கை முறையை வீடியோவாக வெளியிட்டிருந்தனர்.
இதனால்தான் இருவரும் பிரபலமடைந்தனர். ரூ 8.36 கோடி மதிப்பிலான வைரம் ஒன்றை வாங்கியிருந்தனர். அது போல் ரூ 16 கோடி மதிப்பிலான கலை படைப்பையும் அந்த தம்பதி வாங்கியிருந்தனர். அது போல் அதிக விலை கொண்ட ஃபெர்ராரி கார், ஆடம்பர உணவு, முதல் வகுப்பு விமான பயணம், ஆடம்பர காபி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் வாங்கியிருந்தனர். அதை வீடியோவாகவும் போட்டிருந்தனர்.
இந்த நிலையில் சவுதியில் அந்த பெண் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடற்கரையில் நான் தளர்வான ஆடைகளை அணிந்தபடி இருக்க விரும்பினேன். ஆனால் அந்த ஆடையில் இருக்கும் போது பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அதனால் என்னுடைய கணவர் கடற்கரை ஒன்றையே விலைக்கு வாங்கிவிட்டார்.
ஏதேனும் முதலீட்டு காரணங்களுக்காகவும் நாங்கள் செலவு செய்வது என திட்டமிட்டிருந்தோம். நான் பிகினி ஆடையில் குளிக்க நினைத்தேன். அதற்காக தீவையும் வாங்கிவிட்டார் என்றார். பாதுகாப்புக்காக அந்த தீவு பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. அந்த தீவு ஆசியாவில் உள்ளது. அதன் விலை இந்திய மதிப்பில் ரூ 418 கோடி ஆகும்.
அது எந்த இடம் என அறிவிக்கவிட்டாலும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை வைத்து அது எந்த பகுதியில் உள்ளது என்பதை பலர் தேடி வருகிறார்கள். இவரது கணவரை இன்ஸ்டாவில் பலர் பாராட்டி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதி அல் நடாக்கின் பிறந்தநாள் அன்று அவரது கணவர் ரூ 60 லட்சம் மதிப்பிலான பொருட்களை பரிசாக கொடுத்ததாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
சவுதி அல் நடாக் ஷாப்பிங் செய்வதற்காக ரூ.12 லட்சம் செலவழித்தாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும், ஹெர்ம்ஸ் பிராண்ட்டின் ஷோரூமில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வாங்கியதாகவும் அந்த பெண் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் அந்த கணவர் தனித்தீவை வாங்கிக் கொடுத்ததால் அவர் இந்த ஆண்டின் சிறந்த கணவர் என்று இணையத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications