பத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்
Recommended Video

ரியாத்: சவுதி அரேபியாவைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட்டில் பணியாற்றியவருமான ஜமால் கஷோகி உடல் தூதரக அதிகாரி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியாவில் முன்னணி புலனாய்வு பத்திரிகையாளராக இருந்தவர் ஜமால் கஷோகி. ஆனால் அங்கு இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பிறகு அவரை தொடர்ந்து விமர்சனம் செய்து கட்டுரைகள் எழுதி வந்தார்.
இதையடுத்து ஜமால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்று குடிபுகுந்தார்.
[வரதட்சணை தரவில்லை என்பதற்காக மருமகள்களை இப்படி செய்யலாமா மாமனார்?]

சவுதி தூதரகம்
வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல பத்திரிக்கையில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் அங்கிருந்த படியும் சவுதி இளவரசர் தொடர்பாக விமர்சனக் கட்டுரைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வந்தார். இதனால் இளவரசர் தரப்பு இவர் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த ஜெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து தனது விவாகரத்து தொடர்பான ஆவணங்களை வாங்குவதற்காக துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்திற்கு செப்டம்பர் 28-ஆம் தேதி ஜமால் கஷோகி சென்றார். ஆனால் அவரை மீண்டும் அக்டோபர் 2ம் தேதி திரும்பி வருமாறு சவுதி தூதரக அதிகாரிகள் கூறி திருப்பி அனுப்பினர்.

திரும்பவில்லை
அக்டோபர் 2ம் தேதி சவுதிஅரேபியா தூதரகத்திற்கு சென்ற ஜமால் கஷோகி, திரும்பி வரவே இல்லை. இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசும் ஊடகங்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இவரை கொலை செய்வதற்காகவே ரியாத் நகரில் இருந்து தனித்தனி ஜெட் விமானங்களில் அன்றைய தினம் துருக்கிக்கு 15 பேர் கொண்ட சிறப்பு குழு சென்றதாகவும், துருக்கி ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டன.

தூதரகத்திற்குள் கொலை
இதையடுத்து அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் அழுத்தம் தீவிரமானது. தனது தூதரகத்திற்குள் வைத்து ஜமால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை சவுதி அரேபியா இரு தினங்களுக்கு முன்பாக ஒப்புக்கொண்டது. அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சவுதி கூறியது.

துண்டு துண்டாக
ஆனால் துருக்கி ஊடகங்கள் ஜமால் கஷோகி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வெளியிட்டன. சவூதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவர் வீட்டின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தான் ஜமால் கஷோகியின் வெட்டப்பட்ட உடல் கிடப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உலக நாடுகளின் கோபம் சவுதி அரேபியா மீது திரும்பியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications