பத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்
Recommended Video

ரியாத்: சவுதி அரேபியாவைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட்டில் பணியாற்றியவருமான ஜமால் கஷோகி உடல் தூதரக அதிகாரி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியாவில் முன்னணி புலனாய்வு பத்திரிகையாளராக இருந்தவர் ஜமால் கஷோகி. ஆனால் அங்கு இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பிறகு அவரை தொடர்ந்து விமர்சனம் செய்து கட்டுரைகள் எழுதி வந்தார்.
இதையடுத்து ஜமால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்று குடிபுகுந்தார்.
[வரதட்சணை தரவில்லை என்பதற்காக மருமகள்களை இப்படி செய்யலாமா மாமனார்?]

சவுதி தூதரகம்
வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல பத்திரிக்கையில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் அங்கிருந்த படியும் சவுதி இளவரசர் தொடர்பாக விமர்சனக் கட்டுரைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வந்தார். இதனால் இளவரசர் தரப்பு இவர் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த ஜெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து தனது விவாகரத்து தொடர்பான ஆவணங்களை வாங்குவதற்காக துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்திற்கு செப்டம்பர் 28-ஆம் தேதி ஜமால் கஷோகி சென்றார். ஆனால் அவரை மீண்டும் அக்டோபர் 2ம் தேதி திரும்பி வருமாறு சவுதி தூதரக அதிகாரிகள் கூறி திருப்பி அனுப்பினர்.

திரும்பவில்லை
அக்டோபர் 2ம் தேதி சவுதிஅரேபியா தூதரகத்திற்கு சென்ற ஜமால் கஷோகி, திரும்பி வரவே இல்லை. இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசும் ஊடகங்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இவரை கொலை செய்வதற்காகவே ரியாத் நகரில் இருந்து தனித்தனி ஜெட் விமானங்களில் அன்றைய தினம் துருக்கிக்கு 15 பேர் கொண்ட சிறப்பு குழு சென்றதாகவும், துருக்கி ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டன.

தூதரகத்திற்குள் கொலை
இதையடுத்து அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் அழுத்தம் தீவிரமானது. தனது தூதரகத்திற்குள் வைத்து ஜமால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை சவுதி அரேபியா இரு தினங்களுக்கு முன்பாக ஒப்புக்கொண்டது. அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சவுதி கூறியது.

துண்டு துண்டாக
ஆனால் துருக்கி ஊடகங்கள் ஜமால் கஷோகி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வெளியிட்டன. சவூதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவர் வீட்டின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தான் ஜமால் கஷோகியின் வெட்டப்பட்ட உடல் கிடப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உலக நாடுகளின் கோபம் சவுதி அரேபியா மீது திரும்பியுள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications