டெல்லியில் வங்கிப் பணம் ரூ. 22.5 கோடி கொள்ளை? ஓட்டம் பிடித்த வேன் டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் தனியார் வங்கியின் பணத்தை எடுத்துச் சென்ற வேன் டிரைவர் ரூபாய் 22.5 கோடியுடன் தப்பித்துச் ஓடியுள்ள சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற டிரைவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் வங்கி ஒன்று தெற்கு டெல்லியில் தனது வங்கிக் கிளைக்கு பணத்தை கொண்டு செல்வதற்காக வினய் பட்டேல் என்ற துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் மற்றும் பிரதீப் சுக்லா என்ற டிரைவருடன் அனுப்பி வைத்தது. இருவரும் ரூ.22.5 கோடி பணத்துடன் வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.

Rs. 22.5 crore money robbery in delhi?

கோவிந்த்புரி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சென்றபோது, பாதுகாப்புக்காக துப்பாக்கியுடன் சென்ற காவலாளி வினய் பட்டேல், சிறுநீர் கழிப்பதற்காக வேனை விட்டு இறங்கியுள்ளார். பின்னர், அருகில் ஒரு வளையில் காத்திருப்பதாக சொல்லி அந்த டிரைவர் வண்டியை எடுத்துள்ளார். இதனையடுத்து, துப்பாக்கி ஏந்திய அந்த பாதுகாவலர் திரும்பி வந்து பார்த்த போது பிரதீப் சுக்லா என்ற அந்த டிரைவரையும் வண்டியையும் காணவில்லை.

இதுகுறித்த தனியார் வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டபோது, அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் வேனை போலீசார் மீட்டனர். ஆனால் வேனில் இருந்த பணத்துடன் டிரைவர் தப்பிச் சென்றார். பணத்துடன் மாயமான டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+