சேலத்தில் கனமழை.. வீட்டில் புகுந்த மழைநீரில் மூழ்கி இரு மூதாட்டிகள் பலி
சேலம்: சேலம் நான்கு ரோடு பகுதியில் வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் மூழ்கிய இரு மூதாட்டிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
மேலும் ஏற்காட்டில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்காட்டில் இருந்து வரும் மழைநீர் ஆனது சேலம் நான்கு ரோடு அருகில் உள்ள பிரதான ஓடையில் திறந்து விடப்படும்.

ஓடை
இந்த நிலையில் அந்த ஓடையானது தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழை நீர் முழுவதும் சாலையில் வெளியேறி நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்த கவுண்டர் தோட்டம் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

வீட்டின் வெளியே
மேலும் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு கார்கள் ஆகியவை மழை நீரில் மூழ்கியது. இதனால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் உறங்க இடமின்றி வீட்டில் மொட்டை மாடியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

சாக்கடைப் பணிகள்
இப்பகுதியில் உள்ள சாக்கடைப் பணிகள் முழுமை பெறாதாலும் ராட்சத ஓடை தூர்வாரப்படாததாலும் இது போன்ற அவலம் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் நாங்கள் சந்திப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை பொதுமக்கள் வெளியேற்றி வருகின்றனர்.

விரைந்து நடவடிக்கை
மேலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ராட்சத ஓடையை தூர்வாரி சாக்கடை பணியில் விரைவில் முடிக்க வேண்டும் என அப்போது மக்கள் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் 70 வயது மூதாட்டி ருக்மணி மற்றும் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள ரத்தினம் தெரு பகுதியில் 80 வயது மூதாட்டி பழனியம்மாள் ஆகியோர் வீட்டிற்குள் புகுந்த மழை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications