தள்ளாடிய ஆர்த்தி.. கை நரம்புகளை அறுத்து.. கழுத்தை நெரித்து உயிரிழந்த மூவர்.. சேலத்தில் ஒரு சோகம்
சேலம் ஹோட்டலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
Recommended Video

சேலம்: கதவை உடைத்து திறந்தால்.. ஆர்த்தி தள்ளாடியபடியே நின்று கொண்டிருக்கிறார்! ஜூஸில் விஷம் கலந்து குடித்தும்.. கை நரம்புகளை அறுத்தும்.. கழுத்து நெரிக்கப்பட்டும்.. தூக்கிட்டும் 3 பேர் மிக கொடூரமாக ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார்கள்! சேலத்தில்தான் இப்படி ஒரு பயங்கரம் நடந்துள்ளது!
சென்னை சூளைமேடு பாலாஜி பவன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு ஆர்த்தி, ஆஷிகா என்று இரண்டு மகள்கள். ஆர்த்தி வயது 22, ஆஷிகாவுக்கு 20! ஆர்த்தி, பி.ஏ., ஆங்கில இலக்கியமும், ஆஷிகா, என்ஜினியரிங் 3-ம் ஆண்டும் படித்து வந்தனர்.
விஜயகுமார் கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் சில தினங்களுக்கு முன்பு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து ரூம் எடுத்து தங்கினார்கள்.

கதவை திறங்க
இந்நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் ஹோட்டல் ரிசப்ஷனுக்கு ஆர்த்தி போன் செய்து, எங்க ரூம் கதவு திறக்க முடியவில்லை. வந்து திறந்து விடுங்கள் என்று சொன்னார். ஊழியர்களும் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனால், ஆர்த்தி தடுமாறிய நிலையில் இருந்தார்.

கூல் டிரிங்ஸ்
விஜயகுமார், அனுராதா, ஆஷிகா 3 பேரும் சடலமாக கிடந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையும் வேகமாக ஆரம்பமானது. உயிரிழந்த 3 பேரும் கூல்டிரிங்ஸில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

ரத்தப்போக்கு
இறந்தவர்களில் ஒருவரான ஆஷிகா, கையில் பிளேடால் அறுத்துள்ளார். அவர் படுத்திருந்த படுக்கை மற்றும் உடை முழுவதும் ரத்தம் பரவி இருந்தது. அதிலிருந்து அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால்தான் அவர் இறந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது.

நரம்புகள்
ஆனால் அப்படியும் ஆர்த்தி மட்டும் சாகவில்லை போல தெரிகிறது. அதனால் கை நரம்புகளை அறுத்துள்ளார். கழுத்தும் நெரிக்கப்பட்டுள்ளது. விஷம் குடித்தும் சாகாததால், தூக்கிட்டும், கை நரம்புகளை அறுத்தும் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

கந்துவட்டி
உடனடியாக ஆர்த்தியை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த அறையில் ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஊரைவிட்டே வந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரம்
மேலும் தற்கொலை எப்படி செய்து கொண்டோம் என விரிவாக எழுதி வைத்திருப்பதாக ஆர்த்தி தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர். இப்படி ஒரு கொடூரமான தற்கொலை சம்பவத்தினால் சேலம் மக்கள் உறைந்து போய் உள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications