Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்புமணி அப்படி சொன்னதும்.. சட்டென்று மாறிய ஓபிஎஸ் முகம்.. மோடி கூட்டத்தில் நடந்ததை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் பாஜக கூட்டத்தில் பாமக அன்புமணி பேசுவதை முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார் ஓ பன்னீர்செல்வம்.

சேலத்தில் நடக்கும் பாஜக கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் மேடைக்கு ஏற்றப்பட்டு உள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்றுள்ள கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி முழுமையாக மேடைக்கு ஏற்றப்பட்டு உள்ளது. பாஜகவின் முதல் பிரம்மாண்ட தேர்தல் கூட்டமாக சேலத்தில் இது நடத்தப்படுகிறது.

Anbumani speech changes O Panneerselvam face in PM Modi Salem BJP meeting

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இதையடுத்து பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்ய உள்ளார். மதியம் 12.50 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வரும் இந்த நிகழ்வில் கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர். ஓ பன்னீர்செல்வம், பாமகவின் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பங்கேற்று உள்ளனர் . அதேபோல் டிடிவி தினகரனும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.

இந்த நிகழ்வில் பாமக அன்புமணி பேசுகையில், மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள்; அந்த ஏக்கத்தை தணிக்கத்தான் பாமக இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது. நாட்டின் நலன் கருதி நாங்கள் இந்த முடிவை எடுத்து உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் இந்த கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.

மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். 50 ஆண்டுகளாக இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டை வளர விடாமல் தடுத்து உள்ளனர். மக்கள் இதனால் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கின்றனர்.

கடந்த 20 வருடமாக நான் டெல்லிக்கு சென்று வருகிறேன். டெல்லிக்கு செல்கிறேன். இப்போது மோடி வந்த பின் அங்கே அரசியல் சூழ்நிலை மாறி உள்ளது. அங்கே அரசியல் சூழல் மொத்தமாக மோடியால் மாற்றப்பட்டு உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காக மோடி உடன் கைகோர்த்து உள்ளோம்.

ஊழலை ஒழித்தவர் பிரதமர் மோடி. அவருடன் கூட்டணி வைப்பதில் பாமக பெருமை கொள்கிறது. முழு மனதுடன் நாங்கள் இந்த கூட்டணியை வைத்து உள்ளோம்., என்று அன்புமணி கூறினார்.

இறுக்கமான முகம்: இதில் பாமக அன்புமணி " 50 ஆண்டுகளாக இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டை வளர விடாமல் தடுத்து உள்ளனர்" என்று அதிமுக, திமுகவை விமர்சனம் செய்து பேசினார். அப்போது ஓ பன்னீர்செல்வம் முகம் திடீரென இறுக்கம் ஆனது.

முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அன்புமணி பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தார் ஓ பன்னீர்செல்வம். ஓ பன்னீர்செல்வம் தன்னை இன்னமும் அதிமுக என்று கூறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவை விமர்சனம் செய்ததை ஓ பன்னீர்செல்வம் இறுக்கமாக பார்த்தபடி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+