பத்திரிக்கை அடித்து, வளையல் அணிவித்து.. நாய்க்கு நடந்த வளைகாப்பு! - அசத்திய சேலத்து குடும்பம்!
சேலம்: பத்திரிக்கை அடித்து உறவினர்களை அழைத்து தங்களது செல்லப் பிராணியான நாய்க்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார் சேலத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் புகைப்பட கலைஞரான இவர் தனது வீட்டில் சாரா என்ற பொமேரியன் வகையைச் சேர்ந்த நாயை வளர்த்து வருகிறார். அதே வகையை சார்ந்த ஹைடி என்ற ஆண் இனத்தை சேர்ந்த நாயையும் வளர்த்து வருகின்றார்.
எங்களுக்கு சம்பந்தமே இல்லை.. நைஸாக கழன்று கொண்ட சீனா.. ரஷ்யாவிற்கு பெருத்த ஏமாற்றம்! என்ன நடந்தது?
குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே வளர்த்து வந்த செல்லப்பிராணி சாரா கருத்தரித்தது அறிந்ததும் இதுகுறித்து சென்னையில் உள்ள தனது மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது மகள் செல்லப் பிராணிக்கு வளைகாப்பு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை
வளைகாப்பு நடத்த திட்டமிட்டதால், தனியாக பத்திரிக்கை அடித்து அதனை உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து கடந்த 13ஆம் தேதி வளைகாப்பு நடத்தினர். இதற்காக சென்னையில் படித்து வந்த அவரது மகளும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
வளைகாப்பு
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்துவது போன்று இரண்டு நாய்களையும் தனித்தனி இருக்கையில் அமரவைத்து, கர்ப்பம் தரித்த சாரா என்ற செல்லப் பிராணிக்கு மஞ்சள் குங்குமம் சந்தனம் வைத்து நலுங்கு வைத்த பெண்கள் சாராவுக்கு வளையல் மாட்டி அழகு பார்த்தனர்.
நலுங்கு
உறவினர்கள் மட்டுமில்லாமல் அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர்களும் சாராவிற்கு நலுங்கு வைத்து வாழ்த்து தெரிவித்தனர் தொடர்ந்து ஆரத்தி எடுத்து வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்து வைத்த குடும்பத்தினர் வளைகாப்புக்கு வந்தவர்களுக்கு ஐந்து வகையான உணவுகளையும் பரிமாறி அசத்தினர்.
நாகரிகம்
நாகரிகம் வளர்ந்து வரும் இந்த சூழலில் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த தயங்கி வரும் சூழலில் தனது செல்லப்பிராணிகளுக்கு வளைகாப்பு நடத்திய புகைப்பட கலைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.