பார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்!
சேலம்: சேலம் மாநகராட்சி நான்கு ரோடு அருகே சத்திரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஓடியதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் புகார் கொடுத்து 9 மணி நேரம் கழித்து அதிகாரிகள் சரி செய்தனர்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைக்கிறது. குறிப்பாக சென்னையில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் அன்றாடம் போராடி வரும் சூழலை தினந்தோறும் காண முடிகிறது.
சேலம் மாவட்டமும் வறட்சியின் பிடியில் சிக்கி இருப்பதால்,
புறநகரின் பல்வேறு இடங்களில் தண்ணீருக்காக மக்கள் சாலைக்கு வந்து போராடி வருகின்றனர். சேலம் மாநகரில் மட்டும் மேட்டூரில் இருந்து தனி குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒருமுறை விநியோகிகப்படும் குடிநீர் மூலம் ஓரளவு பிரச்சனையை தீர்த்து வைக்கப்படுகிறது.

குடிநீர் குழாய்
இந்த நிலையில்தான் மேட்டூரில் இருந்து ஆத்தூருக்கு தனி குடிநீர் திட்டத்தின் கீழ் கொண்டு செல்லும் பைப் லைனில், சேலம் மாநகராட்சி, சத்திரம் பகுதியில் நேற்று நள்ளிரவு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இரவு 11 மணி அளவில் உடைந்த குடிநீர் குழாயிலிருந்து, தண்ணீர் குபுகுபுவென வெளியேறி வருகிறது.

வேதனை
8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை உடைப்பை சரி செய்ய மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையிலும் சாக்கடையிலும் கலந்து வருகிறது என சத்திரம் பகுதி மக்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மேட்டூரில் இருந்து ஆத்தூருக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் நேற்று இரவு 11 மணி அளவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளோ ஊழியர்களோ
ஒரே ஒருவர் மட்டும் வந்து பார்த்துவிட்டு, சரி செய்வதாக கூறி சென்றனர். ஆனால் 8 மணி நேரத்திற்கு மேலாகியும் இது வரை அதிகாரிகளோ ஊழியர்களோ வரவில்லை.
|
தண்ணீர் சாக்கடை
இதனால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலக்கும் நிலைதான் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இங்கு ஏராளமான தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. ஆனால் இதை சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது என குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் 9 மணி நேரம் கழித்து அதிகாரிகள் சரி செய்ததை அடுத்து தண்ணீர் வீணானது சரி செய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications