நீட் ஆள்மாறாட்டம்.. மொரீஷியஸ் தப்பியதாக கூறப்பட்ட இர்பான்.. சேலத்தில் கைது செய்தது சிபிசிஐடி
Recommended Video
சேலம்: மொரீஷியஸ் தப்பியதாக கூறப்பட்ட மாணவர் இர்பானை சேலத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த உதித் சூர்யா என்ற மாணவனும் அவரது தந்தை வெங்கடேசனும் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் திருவனந்தபுரத்தில் நீட் பயிற்சி மையத்தின் புரோக்கர் ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
சாமியாரை விட்டுட்டு இருக்க முடியலை.. அதான் கணவரை கொன்னுடலாம்னு ஐடியா கொடுத்தேன்.. பதற வைத்த மனைவி!
விசாரணை
அந்த தகவல்களின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல் அவரது தந்தை டேவிட், அபிராமி, தருமபுரி அரசு கல்லூரியில் படித்து வந்த இர்பான், அவரது தந்தை முகமது சஃபி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தந்தை
இதில் பிரவீன், ராகுல் ஆகியோர் முறைகேடு செய்தது தெரியவந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் அவர்களது இரு தந்தையையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அபிராமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீஸார்
இந்த நிலையில் இர்பான் கடந்த 6-ஆம் தேதியே மொரீஷியஸுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அவரது தந்தையும் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரை நேற்று வாணியம்பாடியில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
இத்தனை ஆள்மாறாட்ட விவகாரத்துக்கும் அவர் மூளையாக இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மொரீஷியஸ் சென்றதாக கூறப்பட்ட இர்பான் சேலத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சேலத்தில் கைது
அதன்பேரில் அங்கு சென்ற சிபிசிஐடி போலீஸார் தீவட்டிபட்டியில் உள்ள டேனிஷ்பேட்டையில் பதுங்கியிருந்த இர்பான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தேனிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினால் இன்னும் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.