என்னென்னோ பண்ணி பார்த்தாச்சு.. வாயே திறக்காத கொள்ளையர்கள்.. வெறுப்பில் சேலம் போலீஸார்!
Recommended Video

சேலம்: 4 நாள் ஆகிறதாம்... ரயிலில் இருந்து கொள்ளையடித்த பணத்தை எங்கே கொண்டு போனார்கள், ரயில் பெட்டியை எப்படி வெட்டினார்கள் என்பது குறித்து கைதான கொள்ளையர்கள் வாயே திறக்கவே இல்லை என சிபிசிஐடி போலீசார் உச்சக்கட்ட வெறுப்பில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நாடே வியந்து அதிர்ச்சியுறும் வகையில் சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஓட்டையை போட்டு கொள்ளை நடந்தது. ரூ.5.78 கோடியை பக்கவாக பிளான் பண்ணி ரயில்வே போலீசார், சிபிசிஐடி போலீசார் என அனைவரையுமே திணறடித்துவிட்டனர் கொள்ளையர்.
[புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு ]

இஸ்ரோ உதவி
பிறகு ஒருவழியாக இஸ்ரோ உதவி கொண்டு 2 வருஷம் கழித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 7 பேரை கைது செய்தனர். இவர்கள் கைதானபோதே எங்கிருந்து எப்படி ரூட் போட்டு கொள்ளையடித்தார்கள் என்ற விவரத்தை வாக்குமூலமாக சொன்னார்கள். ஆனாலும் கொள்ளையின் முழு விவரத்தை சொல்லவில்லை. இதனையடுத்து இவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கொள்ளையர்களை 14 நாளில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறையில் அடைப்பு
ஏற்கெனவே 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும், மொகர் சிங், காளியா, மகேஷ், பில்த்தியா, ருசி ஆகிய ஐந்து பேரும், வேறு வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எப்படி ஓட்டை போட்டீர்கள்?
ரயிலில் பணம் கொண்டுவரப்படும் தகவலை கொள்ளை கும்பலுக்கு தெரிவித்தது ரயில்வே ஊழியர்களா? அல்லது வேறு ஏதேனும் அதிகாரிகளா? ரயில் பெட்டி எந்த இடத்தில் வெட்டி ஓட்டை போட்டீர்கள்? இவ்வளவு பணம் இந்த ரயிலில்தான் வருகிறது என்று உங்களுக்கு யார் தகவல் சொன்னது? ரயிலில் எந்த ஆயுதத்தை வைத்து அவ்வளவு பெரிய ஓட்டையை போட்டீர்கள்? என்று கேள்விமேல் கேள்வி போலீசார் கேட்கிறார்களாம்.

4 நாள் ஆகிவிட்டது
ஆனால் விசாரணை ஆரம்பித்து 4 நாள் ஆகியும் ஒருத்தரும் வாய் திறக்கவில்லையாம். பதிலளிக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்களாம் கொள்ளையர்கள். இப்படியே அமைதியாக இருப்பதால் நாள்தான் வீணாகிறதாம். கொள்ளையர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் விசாரணையும் தாமதமாகி கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் எந்த பதிலும கொள்ளையர்கள் தெரிவிக்காத நிலையில், தற்போது 4 நாள் முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

நவம்பர் 12-ம் தேதி ஆஜர்
மீதமிருக்கும் நாட்களில் எப்படியும் உண்மையையும், இந்த கொள்ளைக்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்களையும் பிடித்துவிடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 14 நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பின் வரும் நவம்பர் 12 அன்று இவர்கள் அனைவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications