சேலத்தில் துணிக்கடையில் புகுந்து உரிமையாளரை அரிவாளால் வெட்டும் வீடியோ வைரல்
சேலம்: சேலத்தில் துணிக்கடையில் புகுந்து அதன் உரிமையாளரை அரிவாளால் வெட்டும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் நங்கவள்ளியில் ஒரு துணிக்கடை உள்ளது. இந்த துணிக்கடை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலுதங்கமணிக்குச் சொந்தமானதாகும்.
இங்கு கடந்த 16 ஆம் தேதி கடைக்குள் நுழைய இரு மர்ம நபர்கள், வேலு தங்கமணியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். படுகாயங்களுடன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட தங்கமணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலத்தில் துணிக்கடையில் புகுந்து உரிமையாளரை அரிவாளால் வெட்டும் வீடியோ வைரல் #salem #சேலம் pic.twitter.com/ZlAJYnd7Oa
— Oneindia Tamil (@thatsTamil) July 21, 2019
இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் இருந்த மர்மநபர்கள் அடையாளம் தெரிந்தது. எனினும் அவர்களை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த நிலையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடிக்க தனிப்படை அமைத்த போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.