சேலம் அருகே கோயில் திருவிழாவில் பயங்கர மோதல்.. கடைகளுக்கு தீ வைப்பு.. கல் வீச்சால் பதற்றம்
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போது போலீசார் மோதலை கட்டுப்படுத்தி பதற்றத்தை தணித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தீவட்டிப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும், மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது. தங்களின் முடிவு குறித்தும் நாளை தெரிவிப்பதாக கையெழுத்திவிட்டு இரு தரப்பினரும் சென்ற நிலையில், மீண்டும் அங்கு மோதல் வெடித்துள்ளது. வாக்கு வாதத்தில் தொடங்கிய மோதல் கலவரமாக வெடித்துள்ளது.
இது தீவட்டி பட்டி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மோதலில் 5 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவப்பட்டிப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மோதல் வெடிக்காமல் இருக்க போலீசார் நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல்துறையினர் பெண்கள் சிலரையும் தாக்கியதாக அப்பகுதியில் புகார் கூறிய பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோயிலுக்குள் நுழைய ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருவதால் அறநிலையத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய பிறகு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications