தனியார் பள்ளி பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு! 9ஆம் வகுப்பு மாணவனின் நெஞ்சில் குத்தியதால் பலி
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கை பிடிப்பதில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவர் பலியாகிவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்து பூலாம்பட்டி ரோடு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு பேருந்துகளும் உள்ளன. இந்த பேருந்தில் பல மாணவர்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று பள்ளி முடிந்து மாலை வீடு திரும்புவதற்காக பள்ளி பேருந்துகள் தயார் நிலையில் இருந்தன. அப்போது அங்கு 9ஆம் வகுப்பு மாணவர்கள் பேருந்தில் ஏற வந்தனர். அவர்களுக்குள் இருக்கை பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அப்போது கந்தகுரு என்ற மாணவனின் நெஞ்சில் மற்றொரு மாணவர் ஓங்கி அடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் கந்தகுரு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர் எடப்பாடியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
ஆயினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார். இதையடுத்து மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கந்தகுருவை தாக்கிய மாணவர் யாரென தெரியவில்லை. அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து இனிதான் தெரியவரும். மேலும் இந்த சம்பவம் குறித்து தனியார் பள்ளி வாகனத்தில் இருந்த பொறுப்பாளர்கள், டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக பள்ளி வாகனங்களில் வரிசையாக நிற்க வைத்து ஏற வைப்பது வழக்கம். இது கூட்ட நெரிசலை தடுக்கும் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு! மேலும் இது வரிசையில் நின்று எதையும் பெற வேண்டும் என்ற ஒரு பழக்கத்தையும் கற்றுக் கொடுக்கும்.
அப்படியிருக்கும் போது இந்த பள்ளி வாகனத்தில் கும்பலாக ஏற யார் அனுமதித்தார்கள். பள்ளி பேருந்துகளுக்கென இருந்த பொறுப்பாளர், இவர்கள் சண்டையிடும் வரை என்ன செய்துக் கொண்டிருந்தார் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications