ரேபிட் டெஸ்ட் கிட்.. சேலத்தில் பரிசோதனை.. 18 பேருக்கு கொரோனா தொற்று இல்லை
சேலம்: சேலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 18 பேருக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என உறுதியானது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் பிசிஆர் கருவி மூலம் கொரோன பாதிப்பு சோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் விரைவுப்படுத்தவும் சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்திற்கு 24 ஆயிரம் கிட்டுகள் வந்தன.
தமிழகத்தில் முதல்முறையாக ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சேலத்தில் சோதனை தொடங்கியது. இதற்காக 1000 கருவிகள் சேலம் மாவட்டத்திற்கு வந்தன. இந்த கருவி மூலம் சேலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 18 பேருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் 18 பேருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது.
வெறும் அரை மணிநேரத்தில் இந்த பரிசோதனை முடிவுகள் வந்ததால் இதன் மூலம் கொரோனா பாதிப்புகள் விரைந்து கண்டறியப்படும்.












Click it and Unblock the Notifications