Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2017ல் 7 லட்சம்.. 2022ல் ரூ.1.09 கோடி.. ஆடிப்போக வைத்த சேலம் அரசு ஊழியர் சொத்து மதிப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த பூபாலன் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக 1,188 சதவீதம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவருக்கு கடந்த 2017ம்ஆண்டு சொத்து மதிப்பு வெறும் 7 லட்சமாக இருந்த நிலையில், 2022ம் ஆண்டில் அந்த மதிப்பு ஒரு கோடியே ஒன்பது லட்சமாக உயர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நாவல்பட்டியை சேர்ந்த 30 வயதாகும் பூபாலன் என்பவர் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு ஊழியர் பூபாலன் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் பறந்தது. அதன்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

salem government employee asset

அவர்கள் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ள பூபாலன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, பூபாலனின் மொத்த சொத்து மதிபபு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை ரூ.1 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரத்து 619 சேர்த்திருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்தது. இது அவரது வருமானத்தை விட 1,188 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பூபாலன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் பூபாலன் சேலம் மாவட்டத்தில் சில இடங்களில் சொத்துகள் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியது. குறிப்பாக விசாரித்த போது, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அவரது சொத்து மதிப்பு ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்து 668 ஆக இருந்தது. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அவரது வீடு, வீட்டுமனை, நகைகள், வாகனங்கள், வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளின் மதிப்பை கணக்கீடு செய்தபோது அது ரூ.94 லட்சத்து 9 ஆயிரத்து 943 ஆக உயர்ந்திருந்தது.

இவ்வாறு பல்வேறு வகைகளில் கணக்கீடு செய்ததன் அடிப்படையில் பூபாலன் வருமானத்துக்கு அதிகமாக 1,188 சதவீதம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் மேட்டூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினோம். இதில் எந்த பொருட்களும், ஆவணங்களும் சிக்கவில்லை. மேலும் இவ்வளவு சொத்து அவர் எப்படி சேர்த்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+