2017ல் 7 லட்சம்.. 2022ல் ரூ.1.09 கோடி.. ஆடிப்போக வைத்த சேலம் அரசு ஊழியர் சொத்து மதிப்பு
சேலம்: ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த பூபாலன் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக 1,188 சதவீதம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவருக்கு கடந்த 2017ம்ஆண்டு சொத்து மதிப்பு வெறும் 7 லட்சமாக இருந்த நிலையில், 2022ம் ஆண்டில் அந்த மதிப்பு ஒரு கோடியே ஒன்பது லட்சமாக உயர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நாவல்பட்டியை சேர்ந்த 30 வயதாகும் பூபாலன் என்பவர் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு ஊழியர் பூபாலன் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் பறந்தது. அதன்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ள பூபாலன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, பூபாலனின் மொத்த சொத்து மதிபபு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை ரூ.1 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரத்து 619 சேர்த்திருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்தது. இது அவரது வருமானத்தை விட 1,188 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பூபாலன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் பூபாலன் சேலம் மாவட்டத்தில் சில இடங்களில் சொத்துகள் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியது. குறிப்பாக விசாரித்த போது, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அவரது சொத்து மதிப்பு ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்து 668 ஆக இருந்தது. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அவரது வீடு, வீட்டுமனை, நகைகள், வாகனங்கள், வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளின் மதிப்பை கணக்கீடு செய்தபோது அது ரூ.94 லட்சத்து 9 ஆயிரத்து 943 ஆக உயர்ந்திருந்தது.
இவ்வாறு பல்வேறு வகைகளில் கணக்கீடு செய்ததன் அடிப்படையில் பூபாலன் வருமானத்துக்கு அதிகமாக 1,188 சதவீதம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் மேட்டூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினோம். இதில் எந்த பொருட்களும், ஆவணங்களும் சிக்கவில்லை. மேலும் இவ்வளவு சொத்து அவர் எப்படி சேர்த்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications