Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்கு மண்டலத்தால் கோடிகளை குவித்த ரயில்வே.. வெறும் 3 மாதத்தில் அபராதம் மட்டும் இவ்வளவா?

Subscribe to Oneindia Tamil

சேலம்: கோவை முதல் சேலம் வரை உள்ள சேலம் கோட்ட ரயில் நிலையங்களில் வெறும் 3 மாதத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள், சரக்கு கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.5½ கோடி அபராதம் வசூலித்துள்ளது ரயில்வே.

ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் சரக்கு கட்டணம் செலுத்தாமல் சரக்குகளை ஏற்றி பயணித்தாலும் ரயில்வே சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறி வருவோரிடம் அடிக்கடி சோதனை நடத்தி அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் எடுக்காமலும், சரக்கு கட்டணம் செலுத்தாமலும் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.5½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

How much fine was collected from who traveled without ticket in Salem railway zone in 3 months?

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: "சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரெயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து, ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 44 ஆயிரத்து 370 பேர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 72 லட்சத்து ஆயிரத்து 624 அபராதம் வசூலிக்கப்பட்டது.

How much fine was collected from who traveled without ticket in Salem railway zone in 3 months?

இந்த கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 35 ஆயிரத்து 379 பேர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 93 லட்சத்து 41 ஆயிரத்து 914 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக 103 பேர்களிடம் இருந்து ரூ.72 ஆயிரத்து 55 அபராதம் வசூலிக்ககப்பட்டது.

மொத்தமாக சேலம் ரெயில்வே கோட்டத்தில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை ரூ.5 கோடியே 66 லட்சத்து 15 ஆயிரத்து 593 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+