கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்தால்.. சேலம் கலெக்டர் டாக்டர்களுக்கு கடும் வார்னிங்
சேலம்: சட்ட விரோத கருக்கலைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சமூக சூழலில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதுடன் கர்ப்பிணிகளின் உயிருக்கே ஆபத்துகள் ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே யாராவது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "சட்ட விரோத கருக்கலைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சமூக சூழலில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதுடன் கர்ப்பிணிகளின் உயிருக்கே ஆபத்துகள் ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே சட்ட விரோதமாக கருக்கலைப்புகள் நடைபெறாமல் இருக்க மருத்துவத்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்ப்பிணிகள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்று முன்கூட்டியே அறிவதற்கு முயற்சி செய்வது அல்லது டாக்டரால் தெரிவிக்கப்படுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எந்த ஒரு மருத்துவமனையின் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலமாக அல்லது வேறு பரிசோதனை மூலமாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்தால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி அல்லது ஸ்கேன் மையத்தின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்.
இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய டாக்டரின் மெடிக்கல் கவுன்சில் பதிவு எண் ரத்து செய்யப்படும். மேலும் அவரின் மருத்துவ பணியை நிரந்தரமாக மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்தால் அதில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். பாலினம் கண்டறிதல் தொடர்பான புகார்களை நலப்பணிகள் இணை இயக்குனரின் 73581-22042 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்" இவ்வாறு சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications