சேலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லேசான நில அதிர்வு.. பீதியில் உறைந்த மக்கள்!
சேலம்: சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தின் மேட்டூர், ஓமலூர், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.3ஆக பதிவானதாக பின்னர் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் சேலம் சுற்று வட்டாரப் பகுதியில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டது.
சேலம் மாவட்டத்தின் ஓமலூர், கடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். ஆனால் நில அதிர்வு குறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.