50 அடியை எட்டியது மேட்டூர் அணை.. காவிரியில் மேலும் 5 நாள்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு
Recommended Video

சேலம்: கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரணமாக மேட்டூர் அணை நீர் மட்டம் 2 மாதங்களுக்கு பின் 50 அடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் அமைந்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவில் இயங்குகிறது.

நேற்று பெங்களூருவில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா , கேரளா மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 30 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படாமல் பாக்கி உள்ளதாகவும் ஆகஸ்ட் மாதத்துக்கும் சேர்த்து 45.93 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதேநேரம் கர்நாடகா சார்பில் அதிகாரிகள், அங்கு மழை குறைந்துவிட்டதாகவும், அணைகளின் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகவும் அணைகளின் நீர் இருப்பு விவரங்களை தெரிவித்தனர். இதையடுத்து தமிழகத்துக்காக காவிரியில் அடுத்த 5 நாள்களுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன் குமார் உத்தரவிட்டார்.
இதனிடையே கர்நாடகா திறந்துவிட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் அதிக அளவு வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியை கடந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ள அளவு 120 அடியாகும். இன்னும் 70 அடி தண்ணீர் நிரம்ப வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பெரிய அளவில் பெய்யாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
-
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications