மேட்டூர் அணை நீர்மட்டம் 120.83 அடி.. உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு
Recommended Video
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 120. 83 அடியை எட்டியதை அடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் உச்ச கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து ஞாயிற்றுகிழமை இரவு 8 மணி நிலவரப்படி, 60 ஆயிரம் கனஅடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேநேரம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு 94 ஆயிரத்து 798 மில்லியன் கன அடியாக உள்ளது.

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காரணமாக தமிழக எல்லையான பில்லிகுண்டுவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 68 ஆயிரம் கனடிநீர் வந்து கொண்டிருந்தது.
மேட்டூர் அணை நீர் மட்டம் கடந்த சனிக்கிழமை மதியம் 12.55 மணி அளவில் 120 அடியை அதாவது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் இந்த வெள்ளம் பற்றி கூறுகையில், காவிரி கரையோரம் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லும்படி, அந்தந்த கிராம விஏஓக்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஒரு லட்சம் கனஅடி நீர் வரை காவிரி ஆற்றில் செல்ல வாய்ப்பு உள்ளது என்றனர்.
நாமக்கள் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், சனிக்கிழமை இரவு வெள்ள அபாய எச்சரிக்க விடுத்தார். காவிரி கரையோர கிராமப்புற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக குமாரபாளையம், பள்ளிப்பாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய ஊர்களை சேர்ந்த காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் காரணமாக மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் அல்லது நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு நாமக்கல் மாவட் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். முக்கொம்பு அணையில் இருந்து திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications