இப்ப வர்ற பாட்டெல்லாம் கேட்காதீங்க.. இளையராஜா தடாலடி
பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டும் என்று இளையராஜா கூறியுள்ளார்.
Recommended Video

சேலம்: இப்போ வர்ற சினிமா பாட்டை கேட்காதீங்க.. பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் திரையிசை பாடல்களை கேட்பதை நிறுத்த வேண்டும்" என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் இளையராஜா பொது விழாக்களில் கலந்து கொள்வது அரிது. எப்போதாவது மேடை கச்சேரிகள் செய்வார். அதற்கே ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து வரும். ஆனால் சமீப காலமாகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் குறிப்பாக கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

சுவாரஸ்ய தகவல்கள்
இன்றும்கூட சேலத்தில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் இளையராஜா பங்கேற்றார். அப்போது மாணவர்களிடையே அவர் பேசினார். தான் எப்படி முதன்முதலாக இசையமைக்க வந்தது என்பது குறித்து சுவாரஸ்யமாக விளக்கினார். பின்னர் பாடல்கள் நிறைய பாடினார், மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

புத்தம் புது பூ
அப்போது இளையராஜா மேலும் சொன்னதாவது: "பறவை பறப்பது போலவும், அருவி கொட்டுவதை போலவும் இசை என்பது இயற்கையோடு இணைந்த ஒரு விஷயம். அது இயல்பாகவே நடக்க வேண்டும். அதனை உருவாக்கவெல்லாம் முடியாது. ஒரு பாடலை எத்தனை முறை கேட்டாலும், அன்னைக்குதான் முதல் முதலா கேட்ட மாதிரி புத்தம் புது பூப்போல இருக்க வேண்டும். அப்பதான்அது நல்ல பாடலாக இருக்கும்.

முதல் சம்பளம் ரூ.7
ஆற்றில் தண்ணி போலதான் புதிய நீரோட்டமாக இருக்க வேண்டும். நான் ஆயிரத்துக்கும் மேல படங்களுக்கு இசையமைத்துள்ளேன். அதற்கு கணக்கே இல்லை. பெரியகுளத்தில் இருந்து வைகை அணைக்கு சென்றேன். அதுதான் என் முதல் பஸ் பயணம். அங்க போய் நான் வாங்கிய முதல் சம்பளம் 7 ரூபாய். அந்த பணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இவ்6வளவு காலம் சம்பாதித்த பணத்தில் எனக்கு கிடைக்கவில்லை.

பாடும் நிலாவே...
பெரும்பாலும் நான் இசையமைக்க ரொம்ப நேரம் எடுத்து கொண்டதே இல்லை. "பாடும் நிலாவே... தேன் கவிதை" என்ற பாடலுக்கு மட்டும் கொஞ்ச நேரம் எடுத்து கொண்டேன். இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் காப்பி அடிக்ககூடாது. சொந்தமான சிந்தனை இருக்க வேண்டும்.

மூளை குழம்பிடும்
பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டுமானால், சினிமா பாடல்களை கேட்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், இப்போது வரும் பாடல்களின் இசை எல்லாமே எலக்டரானிக் கொண்டு உருவாகிறது. அதை கேட்கும்போது, உங்களின் மூளை செயல்படாமல் போய்விடும்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications