முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக கார்ட்டூன்.. நாம் தமிழர் நிர்வாகி கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக கார்ட்டூன் வெளியிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வீரபாண்டி குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கருணாநிதி குறித்து அவதூறாக கார்ட்டூன் வெளியிட்டது குறித்து தட்டி கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி சமூக வலைதளங்களில் குமரேசன் என்பவர் அவதூறாக கார்டூன் பதிவிட்டதாக கூறப்படுகிறது இதை பார்த்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது முருகேசன் என்பவரை அவர் கொன்றுவிடுவதாக மிரட்டினாராம்.

Naam Tamilar Party member arrested for publishing defamatory cartoon against Karunanidhi

இதையடுத்து கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அவர் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த குமரேசன் (49) என்பதும் இவர் இவர் நாம் தமிழர் கட்சியில் தெற்கு தொகுதி முன்னாள் துணை தலைவராக இருந்து உள்ளார் என்பதும் தெரிய வந்தது. குமரேசன் சேலம் டவுண் பகுதியில் வாகன உதிரி பாகம் விற்பனை கடை வைத்திருக்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பதிவிட்டது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க குமரேசனை தாதகாப்பட்டி காவலர்கள் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு நாம் தமிழர் கட்சி நிர்வாகி குமரேசனை கைது செய்தனர். இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+