4 வழிச்சாலைக்காக குடியிருப்பு பகுதிக்குள் கை வைக்க முயன்ற அதிகாரிகள்.. போராட்டத்தில் குதித்த மக்கள்
சேலம்: எடப்பாடி அருகே 4 வழிச்சாலைக்கு சுங்கச்சாவடி அமைப்பதற்காக, குடியிருக்கும் வீடுகளை அகற்ற அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி ,கொங்கணாபுரம் வழியாக சேலம் மாவட்டம் ஓமலூர் வரை 4 வழிச்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அளவீடு குறியிட்டு வருகின்றனர். இதனிடையே அம்மங்குட்டூர் அருகே சுங்கச்சாவடி அமைப்பதற்கு அதிகாரிகள் அளவீடு செய்த போது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நான்கு வழிச்சாலை அமைக்க, குடியிருப்பு பகுதியில், அளவீடு பணி நடத்துவீர்களா என கேட்டு பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். ஒரு கட்டத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சாலை மறியல் காரணமாக சங்ககிரியில் இருந்து கொங்கணாபுரம் செல்லும் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அதிகாரிகள் மாற்று பாதையில் நெடுஞ்சாலைதிட்டத்தை கொண்டு செல்லாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்பகுதிவாசிகள் எச்சரித்தனர்.
பின்னர் காவல்துறையினர் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது சுங்ககசாவடி அமைக்க குடியிருப்பு பகுதிகளை எடுக்கக்கூடாது. வேறு மாற்று இடத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மக்கள் உறுதிபட கூறினர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த பின், நிலம் அளவீடு செய்யப்படும் என போலீசார் உறுதியளித்ததால், மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications