கணவன் அருகே அம்மிக்கல்லுடன் வந்த மனைவி.. செம ஷாக்! சேலம் வையாபுரி உடையார் தெருவில் ஓடிய மக்கள்
சேலம்: சேலம் அம்மாபேட்டை பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான கொலை சம்பவம் அந்த ஊரையே உலுக்கி எடுத்துள்ளது.. தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் சித்ரவதை செய்து வந்த கணவரின் அக்கிரமத்தை அந்த மனைவியல் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. இது தொடர்பாக நடந்த சம்பவத்தில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..
சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம்.. இவருக்கு 40 வயதாகிறது.. இவர் டேப் கட்டில் பின்னும் தொழில் செய்து வந்தார்.. அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான பத்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்..

சேலம் கணவர்
இந்தத் தம்பதியினர் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு வையாபுரி உடையார் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்தனர்.. மகிழ்ச்சியாக தொடங்கிய இவர்களது வாழ்க்கையில், தங்கத்திற்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் பெரிய இடியாக வந்து விழுந்தது..
தங்கம் மது போதைக்கு அடிமையானதுடன், தனது மனைவியின் நடத்தையின் மீது தேவையில்லாமல் சந்தேகப்படத் தொடங்கினார்.. போதையில் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பத்மாவிடம் தகராறு செய்வதும், அவரை அடித்துத் துன்புறுத்துவதும் தங்கத்தின் வாடிக்கையாகிப் போனது..
மனைவி மீது சந்தேகம்
இந்த சூழலில் தான் கடந்த 16-ம் தேதி நஞ்சம்பட்டியில் வசித்து வந்த தங்கத்தின் தாயார் காலமானார்.. அம்மா மறைந்த துக்கம் விசாரிக்கவும், காரியங்களை செய்யவும் பத்மா அடிக்கடி நஞ்சம்பட்டிக்கு சென்று வந்துள்ளார்.. ஆனால், தனது மனைவி உறவினர்களைப் பார்க்க செல்வதைக் கூட தங்கம் தவறாக சந்தேகப்பட்டுள்ளார்..
நேற்று இரவும் தங்கம் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.. அப்போது பத்மாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.. சொந்தக்காரர்களைப் பார்க்கச் செல்வதை வைத்து மிகவும் கேவலமாகப் பேசியதுடன், பத்மாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.. இதில் பத்மாவுக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, பெரும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்..
தினமும் இப்படி போதையில் வந்து சந்தேகப்படுவதையும், தன்னை அடிப்பதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் மனவேதனையில் அழுதுகொண்டே இருந்துள்ளார்..
அம்மிக்கல் மனைவி
நள்ளிரவு நேரத்தில் குழந்தைகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.. தங்கம் மது போதையில் கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.. அந்த நேரத்தில் ஆத்திரமும் வேதனையும் தலைக்கேறிய பத்மா, வீட்டில் இருந்த கனமான குழவி கல்லை எடுத்து வந்து, தூங்கிக் கொண்டிருந்த தங்கத்தின் தலையில் ஓங்கிப் போட்டார்.. இதில் தங்கத்தின் தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்..
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.. போலீசார் விரைந்து வந்து தங்கத்தின் உடலைக் கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. தொடர்ந்து பத்மாவை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்..
அந்த விசாரணையில், தங்கம் தனது தம்பி மற்றும் உறவினர்களுடன் சேர்த்துத் தன்னைத் தவறாகப் பேசி தினமும் சித்ரவதை செய்ததாகவும், அந்த டார்ச்சரைத் தாங்க முடியாமல் தான் ஆத்திரத்தில் கொன்றுவிட்டதாகவும் பத்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.. ஒரு சந்தேகத்தால் அழகான குடும்பம் இன்று சிதறிப் போயுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications