என்னயா பண்ணி வச்சுருக்கீங்க! அழகென்ற சொல்லுக்கு முருகா.. சேலம் ராஜ முருகன்! நிர்வாகம் அதிரடி முடிவு
சேலம் : சேலத்தில் 56 அடி ராஜ முருகன் சிலையை புனரமைக்க கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். முருகனின் முக அமைப்பு குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் கோவில் நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்வார்கள்.. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் முருகப்பெருமான் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் குடி கொண்டிருக்கிறார்.

மற்ற கடவுள்களை விட தமிழ் கடவுளான முருகப்பெருமான் வழிபாடு தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாய் இருக்கிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் முருகப்பெருமான் கோயில்கள் அதிகமாக இருக்கிறது. அப்படி ஆத்தூர் அருகே இருக்கும் வடசென்னிமலை முருகன் கோயில் மக்களிடையே பெரும் பிரசித்தி பெற்றது.
இந்த நிலையில் அதற்கு பிறகு சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் முருகன் கோயில் ஒன்று கடந்த சில தினங்களாக இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. சேலம் தாரமங்கலம் அருகே, ராஜமுருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் முருகன் சிலை வடிவமைக்கப்பட்டு சமீபத்தில் பிரதிஷ்டைக்காக சிலையை மக்களின் பார்வைக்காக வைத்துள்ளது கோவில் நிர்வாகம்.
சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டதால் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைதளங்களில் முருக பக்தர்கள் பல்வேறு எதிர்க்கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அழகென்று செல்லுக்கு முருகன் தானே.. ஆனால் இங்கு என்ன முருகனின் முகம் ஒழுங்கின்றி சீரின்றி உள்ளது என கடுமையா விமர்சித்தனர். நேற்று முழுவதும் இது தொடர்பான பதிவுகளை இணையத்தில் அதிகமாக பார்க்க முடிந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் பேசிய போது," சேலத்தில் உள்ள முத்து மலை முருகன் கோவில் சிலையைப் போல் எங்கள் ஆலயத்திலும் ஒரு சிலையை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலை செய்யும் நபர்களுக்கு இதனை கொடுத்தேன் ஆனால், எப்படி கட்டப்போறோம் சிலையை என்பது குறித்து ஒரு வரைப்படம் கூட சிலை செய்பவர்கள் காட்டவில்லை என தெரிவித்தார். இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன். நீங்கள் தெரிந்தவர் என்ற காரணத்திற்காகத்தான் இதனைச் செய்ய ஒத்துக்கொண்டேன் என கூறியுள்ளார்.
எனினும் அருகில் உள்ள கிராமப்புற மக்கள் கோவிலுக்கு வந்து முருக பெருமானை வழிபாடு செய்து தான் வருகிறார்கள். இதுவரை இந்த சிலைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவாகியிருக்கும் நிலையில், பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க முருகன் சிலையை மறுசீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோவிலின் நிறுவன தலைவர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்..
-
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications