கள்ளக்குறிச்சியில் சோகம்.. கோயில் திருவிழாவில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்று திருவிழாவின் போது ஹீலியம் வாயு நிரம்பிய சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். பலூனில் காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து சிதறியதில் அங்கு நின்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்று திருவிழா நடந்து வந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அப்போது பலூனில் காற்று நிரப்பும் ஹீலியம் வாயு நிரம்பிய சிலிண்டருடன் தள்ளுவண்டியில் ஒருவர் பலூன்கள் விற்றுக்கொண்டு வந்தார்.

அப்போது திடீரென ஹீலியம் வாயு நிரம்பிய சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆற்றுத் திருவிழாவின் போது சிலிண்டர் வெடித்து சிதறியதில் அங்கு நின்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications